search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை சில்மிஷம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    இளம்பெண்ணை சில்மிஷம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    • 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

    போலீசில் புகார்

    உடனே அந்த பெண் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த வாலிபர் வெளியே வந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அந்த பெண் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை சில்மிஷம் செய்தவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    வழக்குப்பதிவு

    இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×