search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள   4 ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

    • பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சா கார்த்திக். அஸ்தம்பட்டி அருகே, ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி. பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கீர்த்தி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு, தாதகாப்பட்டி கேட், ஆஞ்சநேயர் கோவில் அருகே வைத்து பிச்சா கார்த்தியை தாக்கினார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க ஜீவானந்தம் என்பவர் வந்தபோது, போலீசார் வாகன சோதனையில் அவர் பிடிபட்டார்.

    விசாரணையில், ராமு என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கீர்த்தி, பரத், மணி, கவியரசு ஆகியோர் மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

    இதில் ஜீவானந்தத்தை தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×