என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "press freedom"

    • பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டார்.
    • உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2025 இல் உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளனர். 2024 இல் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் ஆவர். 

    கொல்லப்பட்டவர்களில் 74 பேர மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா

    தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் பணியின்போது கொல்லப்பட்டனர்.

    இந்தியாவில் கடந்த ஆண்டில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    முகேஷ் சந்திராகர்

    இதுதவிர்த்து உலகளவில் பணியின்போது விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொலைகளுக்கு மேலாக, உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சீனாவில் 143 பேரும், மியான்மரில் 49 பேரும் சிறையில் உள்ளனர்.



    • நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது.
    • சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை அவ்வபோது வெளியாகி வந்த 2025 உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடங்களை இங்கு பார்ப்போம்.

    பொருளாதார வலிமையை அளவிடும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (IMF) குறியீட்டில் உலகளவில் 193 நாடுகளில் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

    பணப்பரிமாற்றம் குறியீட்டின்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் 1-வது இடம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 129 பில்லியன் டாலர் பணத்தைத் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

    'எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் 151-வது இடத்தில் இந்தியா மிகவும் மோசாமான நிலையில் உள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான சவால்களால் இந்தியா கடந்த ஆண்டை விடப் பின் தங்கியுள்ளது.

    உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனாவை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின்வரிசையில் உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக ஆதரவு மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

    ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் பட்டினி குறியீடு பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை "தீவிரமானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை பாலின இடைவெளிக் குறியீடு அளவிடுகிறது. இதில் இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சறுக்கி உள்ளது.  இந்தியாவில் கல்வி மற்றும் பொருளாதாரப் பங்களிப்பில் பெண்களுக்கு முன்னேற்றம் தேவை என்பதை இந்தத் தரவரிசை சுட்டிக்காட்டுகிறது.

    புவி வெப்பமடைவதைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பருவநிலை மாற்றச் செயல்பாட்டுக் குறியீடு (CCPI) மதிப்பிடுகிறது. இதில் இந்தியா 10 வது இடம் பிடித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜி20 நாடுகளிலேயே மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு(EPI) படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடிப்பதில் 180 நாடுகளில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது. காற்றுத் தரம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை வைத்து ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 83-வது இடத்தில் உள்ளது. இந்தியக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

    நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் 4-வது சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

    டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு மூலம் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2024 ஊழல் குறியீடு ஒரு நாட்டின் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து அளவிடுகிறது. இதில் 180 நாடுகளில் இந்தியா 96 வது இடம் பிடித்துள்ளது. இது நிர்வாகத்தில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை உணர்த்துகிறது.

    ஒரு நாட்டின் கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் பிற நாடுகளை ஈர்க்கும் திறனை உலகளாவிய மென்சக்தி குறியீடு அளவிடுகிறது. அதன்படி இந்தியா இதில் 30வது இடத்தில உள்ளது. .

    நாட்டின் வணிகச் சூழல், சொத்துரிமை மற்றும் வரிச் சுமை போன்ற காரணிகளை வைத்து பொருளாதார சுதந்திரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியா 128 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் "பெரும்பாலும் சுதந்திரமற்றது" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை என இது குறிப்பிடுகிறது.

    வயதான காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய அமைப்பின் தரத்தை உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு மதிப்பிடுகிறது. இதில் 104 நாடுகளில் இந்தியா கடைசியாக இருக்கும் D பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதிய ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாததே இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

    போக்குவரத்து வசதியை அளவிடும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது.

    சைபர் பாதுகாப்பு குறியீட்டில் 194 நாடுகளில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

    பயங்கரவாதப் பாதிப்பு குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

    உலகப் போட்டித்தன்மை குறியீட்டில் 69 நாடுகளில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது.

    எரிசக்தி மாற்றம் குறியீட்டில் 118 நாடுகளில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.

    மனித மேம்பாடு (HDI) குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.

    சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்தியா பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முதல் 40 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.

    ஆனால், மக்களின் மகிழ்ச்சி, பசி, ஊடக சுதந்திரம் மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளில் 100-வது இடத்திற்கு அப்பால் இந்தியா பின்தங்கியுள்ளது. 

    • இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க பத்திரிகையாளர்கள் பாடுபட்டனர்.
    • நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.

    இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

    அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

    ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.

    காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.

    அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.

    பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.

    பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.

    ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.

    தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.

    உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.

    வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது
    • தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீட்டித்தது.

    சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்ச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

    ஜூலை 3 ஆம் தேதி, ராய்ட்டர்ஸ் உட்பட 2,355 கணக்குகளை ஒரு மணி நேரத்திற்குள், எந்த விளக்கமும் இல்லாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது என்று எக்ஸ் சர்வதேச விவகாரங்கள் குழு குற்றம்சாட்டியது.

    உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றால் குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், வேறு வழியின்றி உத்தரவைப் பின்பற்றியதாக எக்ஸ் தெரிவித்தது.

    ஜூலை 3 ஆம் தேதி எந்த புதிய தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ராய்ட்டர்ஸ் போன்ற முக்கிய சர்வதேச செய்தி சேனல்களைத் தடுக்க அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் கணக்குகள் முடக்கப்பட்டவுடன், அவற்றை உடனடியாக இந்தியாவில் தடை நீக்க வேண்டும் என்று அரசு எக்ஸ்-க்கு கடிதம் எழுதியது.

    ஜூலை 5 இரவு முதல் தொடர்ச்சியான பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, ஜூலை 6 இரவு 9 மணிக்கு மேல் தான் எக்ஸ், ராய்ட்டர்ஸ் மற்றும் பிற கணக்குகளைத் தடை நீக்கியது.

    இதற்காக எக்ஸ், 21 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டது என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீக்க தாமதித்ததாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    கணக்குகளை முடக்கும் உத்தரவுகள் தொடர்பாக எக்ஸ் நிறுவனம் இந்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமரிசித்துள்ளது.
    • பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்த டெம்போ என்ற பத்திரிகைக்கு கொடூரமான முறையில் அச்சுறுத்தல் விருட்க்கப்பட்டுள்ளது.

    ஒரு பன்றியின் தலையும், வெட்டபட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியும் டெம்போ பத்திரிகையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    1970 களில் இருந்து இந்தோனேசியாவின் சிறந்த வாராந்திர வெளியீடுகளில் ஒன்று டெம்போ. சமீபத்தில் அதிபர் பிரபோவோவின் கொள்கைகள் குறித்த விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) (மார்ச் 22), டெம்போவின் அலுவலகத்தில் துண்டாக்கப்பட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பன்றியின் தலையும் அங்கு அனுப்பப்பட்டது.

    இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது.



    இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று ஆய்வு அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் - இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சர்வதேச பத்திரிகையாளர் குழுவும் இந்த சம்பவத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    "பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்" என்று டெம்போவின் இதழின் தலைமை ஆசிரியர் செட்ரி யசாரா தெரிவித்துள்ளார். அரசின் சமீபத்திய பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் இந்தோனேசியாவில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
    • சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.

    2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.

    இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.

    சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.

    அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.

    • சமூக கட்டுக்கோப்பிற்கு பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன
    • நேர்மையாக செய்திகளை தரும் பணியில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.

    அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

    ஒரு சமூகம் கட்டுக்கோப்புடன் வளர்ச்சி பாதையில் செல்லவும், பல்வேறு சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களை கொண்ட பொதுமக்கள் ஒன்றுபட்டு நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும், விமர்சனங்கள், எதிர்கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், செய்தி பரவுதல், கருத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை மிக அவசியம். இத்தகைய பெரும்பணியை பத்திரிகைகள் திறம்பட செய்கின்றன.

    ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.

    காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.

    அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.

    பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.

    பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.

    ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.

    தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.

    உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.

    வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பொய் வழக்குகள் போடப்பட்டன
    • நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக க உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத, நிதி மோசடி உள்ள பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டதை இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது.

     

     

    இதுபோல உலகம் முழுவதும் உள்ள பல அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை நியூஸ் கிளிக் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ×