என் மலர்
நீங்கள் தேடியது "ரவுடிகள்"
- ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை செய்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங் உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தலைமையில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் அதிகாலை 4 மணி முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒரே நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் 100 பேரை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிகாலை வேளையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
- தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
- சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
- இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
- வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.
- செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
- 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள் அதில் மொத்த ரவுடிகள் 423 பேர்களில் 373 ரவுடிகளின் வீடுகளில் 17 வகையாக கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் 45 ரவுடிகளின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தைப் பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
32 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்களையும் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
- மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
கோவை:
தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள்.
கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடி கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து வந்தனர்.
கைதானவர்களில் கவுதம், ஜோஸ்வா ஆகியோர் நடுவழியில் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 2 பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
திருச்சி வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சகோதரர்களான துரை என்ற துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் திருச்சி தில்லை நகரில் நடந்த கொள்ளை வழக்கில் நீண்ட கால தேடுதலுக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடந்த 20-ந்தேதி அவர்களை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் காலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஜீப்பில் இருவரையும் அழைத்து சென்றனர்.
அப்போது துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது இருவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யா என்பவன் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றான்.
அப்போது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா துணிச்சலாக செயல்பட்டு சூர்யா மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் சூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகதீஸ்வரன் என்பவர் சிக்கிய நிலையில், ரவுடி வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை பாண்டியன் கோட்டை கல்குவாரியில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை கடந்த மாதம் 28-ந்தேதி காலை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ் ஏட்டு சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தின் காலில் சுட்டார். இதனால் அவர் தப்பி ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல தமிழகத்தில் ரவுடிகள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.
- வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- கைது செய்யப்பட்ட செல்வம் மீது கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது.
நாகர்கோவில் :
சாமிதோப்பு அருகே கருப்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற னர்.
இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கரும்பாட்டூரை சேர்ந்த செல்வன் (வயது 37), மண்டைக்காட்டைச் சேர்ந்த வேல்முருகன் (36), கன்னங்குளத்தைச் சேர்ந்த சகாயராஜ் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 18 கிராம் நகை மற்றும் வாட்ச் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செல்வம் மீது கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. வேல்முருகன் பெயரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மீது 6 பிடிவாரண்டு உள்ளது. மேலும் 15 வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- சென்னை மாநகரில் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- போலீசார் கடந்த ஓராண்டில் 280 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 44 இதர குற்றவாளிகள் என மொத்தம் 324 குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகரில் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 1.துப்பாக்கி கார்த்தி, 2.ஆற்காடு சுரேஷ், 3.பினு, 4.கரிமேடு அன்பு, 5.வெள்ளை பிரகாஷ், 6.பால் பிரவீன், 7.ராம்கி, 8.பல்லு சதீஷ், 9.ரஜினி ஆகியோர் பட்டா கத்திகளுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த எழும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி மாறா (எ) மணிமாறன் உள்பட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த ஓராண்டில் 280 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 44 இதர குற்றவாளிகள் என மொத்தம் 324 குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
- சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
- குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை:
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒருநாள் சிறப்பு நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என 804 பேரின் வீடு தேடிச் சென்று தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
மேலும் "உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் ஏற்கனவே, 459 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,262 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தேடுதலை அறிந்து மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்குகளில் ஆஜராகி உள்ளனர். போலீசாரின் இதுபோன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடரும்" என்றனர்.
- போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.
கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.
புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.
விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.
சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.
இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.






