என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் துப்பாக்கிச்சூடு"
- துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
- மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
கோவை:
தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள்.
கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடி கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து வந்தனர்.
கைதானவர்களில் கவுதம், ஜோஸ்வா ஆகியோர் நடுவழியில் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 2 பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
திருச்சி வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சகோதரர்களான துரை என்ற துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் திருச்சி தில்லை நகரில் நடந்த கொள்ளை வழக்கில் நீண்ட கால தேடுதலுக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடந்த 20-ந்தேதி அவர்களை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் காலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஜீப்பில் இருவரையும் அழைத்து சென்றனர்.
அப்போது துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது இருவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யா என்பவன் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றான்.
அப்போது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா துணிச்சலாக செயல்பட்டு சூர்யா மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் சூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகதீஸ்வரன் என்பவர் சிக்கிய நிலையில், ரவுடி வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை பாண்டியன் கோட்டை கல்குவாரியில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை கடந்த மாதம் 28-ந்தேதி காலை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ் ஏட்டு சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தின் காலில் சுட்டார். இதனால் அவர் தப்பி ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல தமிழகத்தில் ரவுடிகள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.
‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் வாதிட்டார்.
அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பலியனாவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மே.30-ம் தேதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும், அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.






