என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மனித உரிமை ஆணையம்"

    • விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
    • ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

    இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சுனில் குமார் மீனா தலைமையில் மோனியோ உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவினர் இன்று விக்கிரவாண்டி வந்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கலெக்டர் பழனி உடன் இருந்தார்.

    • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

    இதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை.
    • துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம் பின்னர் அந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பு வாதம் முன்வைத்தது.

    இந்த வாத்தை ஹென்றி திபேன் தரப்பு ஏற்க மறுத்தது. மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் தெரிவித்தார்.

    இதனையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனையடுத்து கருது தெரிவித்த நீதிபதி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இறுதியாக எதிர் மனுதாரரின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்கும் படி மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
    • தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.

    அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

    அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.

    முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமசுப்பிரமணியம் தமிழகத்தை சேர்ந்தவர்.
    • பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்தனர்.

    ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமசுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.

    முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்தனர்.

    சென்னை உயர்நீதிமன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் ராமசுப்பிரமணியம் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

    இதற்கு முன்பு, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக விஜய பாரதி சயானி பதவியில் இருந்தார்.

     

    • தேர்வு குழுவால் பாரபட்சம் இல்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.
    • தேர்வு செயல்முறை அடிப்படையில் குறைபாடு உள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ராவின் பதவி காலம் கடந்த ஜூன் 1-ந்தேதி முடிவடைந்தது.

    இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து ஜனாதிபதி திரவு பதி முர்மு நேற்று அறிவித்தார்.

    ராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மேலும் பிரியங்க் கனூங்கோ மற்றும் டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூறியதாவது:-

    தேர்வு குழுவால் பாரபட்சம் இல்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நியமனம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். இதில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் முன்னோக்குகளைப் புறக்கணித்து, பெயர்களை இறுதி செய்வதற்கு தேர்வு குழு அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையை நம்பியுள்ளது. தேர்வு செயல்முறை அடிப்படையில் குறைபாடு உள்ளது.

    தேசிய மனித உரிமை ஆணையத்தின் நம்பகத்தன்மை, செயல்திறன் இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளை வரையறுக்கும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை பொறுத்தது. நாங்கள் முன்மொழிந்த பெயர்கள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன மற்றும் ஆணையத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர்.

    தலைவர் பதவிக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் தலைவர்கள் முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய மேற்கொண்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.


    நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர்.

    அதே வேளையில் மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு குழுவினர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களுக்கு மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

    விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. #Sterlite #SterliteProtest #NHRC
    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

    போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி நகரில் அரங்கேறிய துப்பாக்கி சூடு, தடியடி, தீ வைப்பு உள்ளிட்டவைகள் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்-காட் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. கலவரம் தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் பதியப்பட்டன.

    இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடி வருகிறார். அவரது நேரடி கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான போலீஸ் சூப்பிரண்டு புபுல்தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால்பகர், நிதின்குமார், அருள்தியாகி ஆகிய 5 பேர் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி தங்களது விசாரணையை துவங்கிய அவர்கள் முதலில் துப்பாக்கி சூடு மற்றும் மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.

    அவர்கள் கடந்த 4-ந் தேதி 144 தடை உத்தரவை அமுல்படுத்துவதற்காக பணி அமர்த்தப்பட்டிருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடமும், வன்முறையில் காயமடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்குமண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், மேலும் வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

    நேற்று துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். இதற்காக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் போலீஸ்காரர் ராஜா உள்ளிட்ட 9 போலீசார் உள்பட 45 பேர் ஆஜரானார்கள்.

    எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் எழுப்பினர்.

    அதே போல் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் இன்று தூத்துக்குடி வரலாம் என கூறப்படுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது.

    இற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் போலீஸ் சூப்பிரண்டு புபுல் தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால் பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த குழுவினர் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்தவர்கள், துப்பாக்கி சூட்டின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரம், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் துப்பாக்கி சூடு, தடியடி சம்பவத்துக்கு பிறகு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.



    இதனிடையே துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலியானவர்களின் குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையத்தினர், பலியான அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், லயன்ஸ் டவுனை சேர்ந்த மாணவி சுனோலின், தாமோதரன் நகர் மணிராஜ் ஆகியோரது வீடுகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பலியான மற்ற 9 பேரின் வீடுகளுக்கும் சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.  #Thoothukudifiring
    ×