search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigate"

    • டெய்லர் கடையில் இருந்தபோது அத்துமீறி நுழைந்து தாக்குதல்
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வடவள்ளி,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் இடையார்பாளையம் ரோட்டில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் வாலி பருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம் பெண் கடையில் இருந்தார். அப்போது அங்கு வாலிபர் சென்றார். அவர் இளம்பெண்ணிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுத்து விட்டார். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அங்கு இருந்த கத்தரிகோலை எடுத்து இளம்பெண்ணின் தோள் பட்டை, தொடை உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார்.

    இதில் வலி தாங்க முடியாமல் இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் குழுவினர் கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 12 ஆயிரம் முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    ஆய்வின்போது ஒரு அறையில் உடைந்த மற்றும் அழுகிய நிலையில் கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை ரோட்டோரத்தில் உள்ள சிறிய கடைகளுக்கு ஆம்லெட், ஆப்பாயில் தயாரிப்பதற்காகவும், சிறிய பேக்கரிகளில் கேக் தயாரிக்கவும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்தமுட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட முட்டை விற்பனை செய்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போன்ற முட்டைகளை பண்ணையில் இருந்து இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சிறு வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. முட்டை பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி ஆகும் உடைந்த முட்டைகளை தாங்களே பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும்.

    உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி போன்ற உடல்உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற உடைந்த முட்டைகளை எந்த பண்ணையில் இருந்து வாங்கி வந்தார்கள், யார் யாரெல்லாம் இதில் தொடர்பு உடையவர்கள் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
    • இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், ரகு, லட்சுமியிடம் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ரகு தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கொடூரமாக லட்சுமியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளி களை தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி ரகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    தொடர்ந்து போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமதுல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் (வயது 29), சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி அய்யர் வீதியை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய 3 பேரும் நேற்று பவானி ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி, சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    ஏற்கனவே சரண் அடைந்த ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் அவரது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார், இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரகு உள்பட 4 பேரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார்கள்.

    அதன்அடிப்படையில் போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

    • பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை

    தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் கனிமொழியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.

    மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21-ந் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர்.

    இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னி லையில் உடற்கூராய்வு செய்யவும், மருத்துவ குழு அமைத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் மகளின் இறப்பிற்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவகல்லூரி முதல்வர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், துறைத்தலைவர், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை, சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும் அமைக்கப்பட்ட மருத்துவர்களின் உயர்மட்ட குழு பெண் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதன் அறி க்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • கபிஸ்தலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலான அய்யனார் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அங்கிருந்த கதண்டு கூட்டில் இருந்து பறந்து வந்து பாஸ்கரனை கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கபிஸ்தலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (55) என்பவர் தனது உறவினர்களுடன் குலதெய்வ கோயிலான அய்யனார் கோவிலுக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கிருந்த கதண்டு, கூட்டில் இருந்து பறந்து வந்து பாஸ்கரனை கொட்டி உள்ளது. இதையடுத்து உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று குழந்தைகளிடம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு தந்தையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் அந்த பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அது பிரிட்டானியா கம்பெனியின் தயாரிப்பு பிஸ்கட். இதனை பொங்கலூரில் உள்ள ஒரு விநியோகிஸ்தர் கடைக்கு வினியோகம் செய்துள்ளார். அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் வந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தேவைப்பட்டால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழு தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோவும் உடனிருந்தார். 



    இந்நிலையில், ஆய்வு குழுவினர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினர். சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்னரே, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று மாலை வருகை தந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.



    இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் தாமிர தாதுக்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite
    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கிடைக்காததால் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.



    குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தொடர்ந்தனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். அத்துடன் செய்யாத்துரை, அவரது மகன்கள் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகளின் வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனையிட வங்கி அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற்று வருகின்றனர்.

    இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    அத்துடன் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை எண்ணியுள்ளது. இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த விசாரணையின்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செய்யாத்துரை மற்றும் அவரது நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பினாமி சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரை, நாகராஜிக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட 3 நிறுவனங்களும் தலா ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 3 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 கோடியே 70 லட்சமாகும். இப்படி இருக்க தற்போது வரை எப்படி ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் இவர்களுக்கு வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    செய்யாத்துரை மற்றும் நாகராஜிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அத்துடன் செய்யாத்துரைக்கு தொழில் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதால், அவர்களையும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடைபெறும். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது தீபக் என்பவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள எவால்வு குளோத்திங் கம்பெனியிலும் வருமான வரி சோதனை நடந்ததாக தவறாக செய்தி வெளியானது. எவால்வு குளோத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் இல்லை என்றும், எவால்வு குளோத்திங் நிறுவனத்துக்கும், எஸ்.பி.கே. அல்லது டி.வி.எச். நிறுவனங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் எவால்வு குளோத்திங் நிறுவன வக்கீல் டி.மோகன் தெரிவித்து உள்ளார்.

    மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவருடைய பெற்றோரிடம் விசாரித்ததில், தனது மகன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது பைகளை எடுத்து வருவார். கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் என்பதால் அவற்றை நாங்கள் என்ன ஏது என்று கேட்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டுவந்தார். அதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த தெருவில் வசிப்பவர்களும் பூமிநாதன் பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    மயிலாப்பூர், பங்கார அம்மாள் கோவில் தெருவில் வசித்து வரும் காரைக்குடியை சேர்ந்த நகை ஆசாரி முத்தையா என்பவர், பிரபல நகை கடைகளுக்கும், வெளிமாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கும் நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய மேற்கொண்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.


    நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர்.

    அதே வேளையில் மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு குழுவினர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களுக்கு மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

    விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. #Sterlite #SterliteProtest #NHRC
    ×