search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குடும்பம் நடத்த வர மறுத்த கள்ளக்காதலியை கத்திரிகோலால் குத்திய வாலிபர்
    X

    கோவையில் குடும்பம் நடத்த வர மறுத்த கள்ளக்காதலியை கத்திரிகோலால் குத்திய வாலிபர்

    • டெய்லர் கடையில் இருந்தபோது அத்துமீறி நுழைந்து தாக்குதல்
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வடவள்ளி,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் இடையார்பாளையம் ரோட்டில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் வாலி பருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம் பெண் கடையில் இருந்தார். அப்போது அங்கு வாலிபர் சென்றார். அவர் இளம்பெண்ணிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுத்து விட்டார். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அங்கு இருந்த கத்தரிகோலை எடுத்து இளம்பெண்ணின் தோள் பட்டை, தொடை உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார்.

    இதில் வலி தாங்க முடியாமல் இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×