search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NHRC investigation"

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

    போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி நகரில் அரங்கேறிய துப்பாக்கி சூடு, தடியடி, தீ வைப்பு உள்ளிட்டவைகள் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்-காட் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. கலவரம் தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் பதியப்பட்டன.

    இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடி வருகிறார். அவரது நேரடி கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான போலீஸ் சூப்பிரண்டு புபுல்தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால்பகர், நிதின்குமார், அருள்தியாகி ஆகிய 5 பேர் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி தங்களது விசாரணையை துவங்கிய அவர்கள் முதலில் துப்பாக்கி சூடு மற்றும் மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.

    அவர்கள் கடந்த 4-ந் தேதி 144 தடை உத்தரவை அமுல்படுத்துவதற்காக பணி அமர்த்தப்பட்டிருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடமும், வன்முறையில் காயமடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்குமண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், மேலும் வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

    நேற்று துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். இதற்காக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் போலீஸ்காரர் ராஜா உள்ளிட்ட 9 போலீசார் உள்பட 45 பேர் ஆஜரானார்கள்.

    எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் எழுப்பினர்.

    அதே போல் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் இன்று தூத்துக்குடி வரலாம் என கூறப்படுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது.

    இற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் போலீஸ் சூப்பிரண்டு புபுல் தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால் பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த குழுவினர் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்தவர்கள், துப்பாக்கி சூட்டின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரம், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் துப்பாக்கி சூடு, தடியடி சம்பவத்துக்கு பிறகு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.



    இதனிடையே துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலியானவர்களின் குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையத்தினர், பலியான அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், லயன்ஸ் டவுனை சேர்ந்த மாணவி சுனோலின், தாமோதரன் நகர் மணிராஜ் ஆகியோரது வீடுகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பலியான மற்ற 9 பேரின் வீடுகளுக்கும் சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.  #Thoothukudifiring
    துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தூத்துக்குடியில் விசாரணையை நாளை தொடங்குகின்றனர். #ThoothukudiShooting #NHRC
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் மோதலாக மாறியது.

    இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.



    அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

    விசாரணைக்கு பின்னர் 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த குழுவினர் நாளை (3-ந்தேதி) தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர். பின்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கபட உள்ளது. #ThoothukudiShooting #NHRC

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ம் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சிறப்பு குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதனை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கிறது.
    ×