என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை நாளை தொடக்கம்
Byமாலை மலர்1 Jun 2018 7:28 AM GMT (Updated: 1 Jun 2018 7:28 AM GMT)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.
அவர்கள் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சிறப்பு குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதனை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.
அவர்கள் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சிறப்பு குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதனை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X