

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமசுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.
முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் ராமசுப்பிரமணியம் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக விஜய பாரதி சயானி பதவியில் இருந்தார்.