என் மலர்
நீங்கள் தேடியது "sterlite copper"
- சுப்ரீம்கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு மீதான விசாரணை முடிவில் சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், "ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர்நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது என்று தெரிவித்துள்ள சுப்ரீம்கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.
இது ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது, தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயர்வும் சலிப்புமின்றி போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.
- வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு சீட் கொடுக்க விடாமல் தடுத்த ஓ.பி.எஸ். நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சேர்ந்து தான், 7 உட் பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு நாங்கள் எல்லோரும் விசுவாசமாக இருப்போம். தமிழக அரசியல் செயல்பாடுகள் இப்போது சுமாராக தான் உள்ளது. யாருக்கும் தொந்தரவு கிடையாது. அதே சமயம் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டுகிறேன்.
தொழிலாளர்கள் முன்னேறுவதற்கு தொழி ற்சாலைகள் தேவைப்படு கிறது. அதனால், வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து விற்கப்பட்டால், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
அந்த நிறுவனம் விற்க ப்படகூடாது. மீண்டும் தொழி ற்சாலையை திற க்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேண்டுகோள். இப்பகுதியில் எங்களது கட்சி சார்பில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்களை மர்மநபர்கள் கிழித்துள்ள னர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழைக்கு சுமார் 380 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காய்கறிகள், எண்ணை, தேங்காய், அரிசி மற்றும் உணவு பொருட்கள், பிஸ்கட்கள், பழங்கள், சுத்தம் செய்வதற்கு பயன்படும் பொருட்கள், மீட்புக்கருவிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இவை அனைத்தும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கண்டெய்னர் லாரியில் நிரப்பப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இவை கேரளா பத்தனம் திட்டா பகுதி தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. #KeralaFloodRelief








