என் மலர்
நீங்கள் தேடியது "vehicle"
- மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம்.
- பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேரூர்,
பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்குப்பைகளை அள்ளுவதற்காக, சிறுதுளி மற்றும் பிரிக்கால் நிறுவனம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி உள்ளது.
மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்த கூடிய இந்த பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் நடந்தது.
இதில், சிறுதுளி தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய பேட்டரி வாகனத்தின் சாவியை, ஊராட்சித் தலைவர் என்.பி. சாந்திபிரசாத் மற்றும் அன்னதான சேவகர் வி. பிரசாத் ஆகியோரிடம் வழங்கினர்.
அப்போது, ஊராட்சி செயலர் மனோகர், தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
- பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- நகராட்சி கமிஷனர் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டினர்.
- பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேட்டுப்பாளையம்,
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கு உள்ள பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்து வெளியூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் அந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் ஒருசிலர் வெளி வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இருந்தபோதிலும் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரில் ஒரு சிலர், மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தை காலையில் நிறுத்தி விட்டு, மாலையோ அல்லது இரவோ வந்து எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ -மாணவிகள் நிற்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதாவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அவர் அதிரடியாக பஸ் நிலையத்திற்கு வந்தார். அவருடன் பொறியாளர் சுகந்தி மற்றும் நகராட்சி ஊழியர்களும் வந்திருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாகனங்கள் தடையை மீறி நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டு போட்டு பூட்டினார்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், பஸ் நிலைய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒருசிலர் காலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் மாலையோ அல்லது இரவோ வந்து வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் பேருந்து பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்ச ரித்தும் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு பூட்டு போட்டு உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து உரிய அபராதம் செலுத்திய பின்னரே, வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள்தொடரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- சிவா அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சிவா (வயது 52). இவர் அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை சிப்காட் அருகே எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
- வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-
புதுவை சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு ரூ.1,000-மும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இதற்காக புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகத்திலும், டவுண் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணா சாலை, கடலூர் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை), கடற்கரை சாலை முதல் வில்லியனூர் ஆரிய பாளையம் பாலம் வரை, காமராஜர் சாலை , ராஜீவ்காந்தி சிலை முதல் பாண்லே வரை மரப்பாலம் சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
அரியாங்குப்பம் பாலம் முதல் முள்ளோடை சந்திப்பு வரை, ஆரிய பாளையம் பாலம் முதல் மதகடிப்பட்டு எல்லை வரை, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லை வரை, 50 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். அதே நேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
- கடவூர் அருகே வாகன சோதனையில் போலீசாரிடம் இருவர் தகராறில் ஈடுபட்டனர்
- தகராறில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு உள்ளனர்
கரூர்,
கரூர் மாவட்டம் கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ்குமார் (வயது 25). இவர் டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இதே போல் இதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரவிச்சந்திரன் (52) இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தர கம்பட்டி பகுதியில் இருந்து ரெட்டியபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ரெட்டியப்பட்டி குஜிலியம்பாறை பிரிவு ரோட்டில் பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது தினேஷ்குமார் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோத னைக்காக நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் ஆவணங்
களை போலீசார் கேட்ட போது தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கெட்ட வார்த் தைகளால் திட்டி உள்ளனர். வாகனத்தணிக்கை செய்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது? என்றும், இனி இந்த பகுதியில் வாகனதணிக்கை செய்யக் கூடாது என்றும் இருவரும் போலீசாரை மிரட்டிய தோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி பாலவிடுதி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்தி ரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
- வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையான ஆவணங்கள் இல்லாமலும், அதிகமான வேகத்திலும் இயக்குவதாக கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆட்டோக்கள் உரிய சான்றுகள் இல்லாமலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்திற்கு ரூ. 7500 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின்பு அவை விடுவிக்கப்படும். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையான ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வேணடும். மிதமான வேகத்திலே வாகனத்தை இயக்க வேண்டும். விதிமீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள தட்டான்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 42). மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீன் வாங்குவதற்காக புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புவனகிரியை அடுத்த சியப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த செல்லதுரை மீது வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.
- விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி,ஆக.19-
அவிநாசியில் தகுதிச் சான்று இல்லாமல் அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த ஆட்டோ, சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் பறிமுதல் செய்தாா்.
அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோ, அதேபோல, சொந்த காரை வாடகைக்குப் பயன்படுத்தி பள்ளி மாணவா்களை அழைத்து வந்த காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.
மேலும் இந்த வாகனங்களுக்கு ரூ. 17ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி–கள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வ–தற்காக இன்று காலை ஆட் டோவில் புறப்பட்டு சென்றனர்.
அந்த ஆட்டோ கே.வெள் ளாகுளம் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனம் முந்திச்செல்ல முயன்றது. இதில் நிலை தடுமாறி கட் டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஆட் டோவில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இந்துஜா (10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ் அன்பு (10), பன் னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதிஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட் சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
அவர்களை உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த–வர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இந்த விபத் தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவரான பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாள், இரு–சக்கர வாகனத்தில் வந்த பூபதி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜா, கவிதாஸ்ரீ, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காயம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.