search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bundles"

    • நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.

    • அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலா டுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலைய ங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளை யார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோ கத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்ப ப்படும். இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் கோவை, திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
    • 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் தலா 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.
    • 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அது போக கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும். அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும்.

    பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
    • பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லானது, கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

    இதனால், மழைக் காலங்களிலும் பருவம் தவறி பெய்யும் மழையிலும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையும்,வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

    எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்புக் கிடங்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் வலியுறுத்தி உள்ளார்.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும்.
    • நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.

    பின்னர் இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்படும். இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.
    • 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசா யிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.

    இதனால் மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.

    இதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    அதன் பொருட்டு அரசு, நெல்லை பாதுகாக்க கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்ட ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் 50,000 மெ.டன், சென்னம்பட்டியில் 2,500 மெடன் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா, திட்டக்குடியில் 6,000 மெடன் என மொத்தமாக 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் முதற்கட்டமாக தஞ்சை பிள்ளையார்பட்டியில் 31000 மெ.டன் (31 x 1000 மெ.டன்) கொள்ளளவில் 31 எண்ணங்கள் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது.
    • சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பாண்டி, கீழப்பாண்டி, கீழப்பெருமலை, மேலப்பெ ருமலை, தில்லைவிளக்கம் புத்தகரம், உதய மார்த்தாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் கீழப்பெருமலை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    • அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள ரேசன் கடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரேசன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்றும், அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப எடை அளவு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறுகையில்:-

    முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாதம் ஒரு முறை எல்லா துறைகளிலும் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி, ரேஷன்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.

    காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.

    அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.

    அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது

    இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்

    தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.

    இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

    தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.

    ×