search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "capacity"

    • மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.
    • 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசா யிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.

    இதனால் மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.

    இதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    அதன் பொருட்டு அரசு, நெல்லை பாதுகாக்க கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்ட ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் 50,000 மெ.டன், சென்னம்பட்டியில் 2,500 மெடன் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா, திட்டக்குடியில் 6,000 மெடன் என மொத்தமாக 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் முதற்கட்டமாக தஞ்சை பிள்ளையார்பட்டியில் 31000 மெ.டன் (31 x 1000 மெ.டன்) கொள்ளளவில் 31 எண்ணங்கள் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டிடம்.
    • 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி மற்றும் காரையூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகங்களை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அதுபோல் உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி, மரைக்கான்சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார்.

    இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், திட்டச்சேரி சுல்தான், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறு மருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    • இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.

    இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும்.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், வடகால், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பொழுது திருகருக்காவூரில் இயங்கி வரும் அங்கன்வாடிக்கு சென்று அங்கன்வாடி குழந்தைகளிடம் ஒன்று, இரண்டு சொல்ல சொல்லி கேட்டு குழந்தைகளை தட்டிக் கொடுத்தார்.

    மேலும் இதைத்தொடர்ந்து எடமணலில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு புதிய கிடங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர் லலிதா கூறும்போது, எடமணலில் உள்ள 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கின் கட்டுமான பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும் என்றார்.

    பின்னர் எடமணல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மரக்கன்றுகளை நட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளியிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுகன்யா பிரேம், தன்னார்வலர் யாமினி அழகு மலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
    • காவிரி மற்றும் கொள்ளிட கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

    இதனால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிட கரை ஓரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இலவச அழைப்பு எண்ணான 1077, தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
    • நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரூ.238.07 கோடியில் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள புதுக்குடியில் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் 4500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும்.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 7250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் என ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18,750 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் 3500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டவும் அனுமதி அளித்துள்ளார். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகையான ரூ.2 ஆயிரத்து 57 கோடி நிதியினை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பி அதன் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்குகாக மேட்டூர் அணை கடந்த மே 24-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் புதிய கட்டளை மேட்டு கால்வாயில் அதன் தலைப்பு உள்ள கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து தண்ணீர் கடந்த ஜூலை 16-ந் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கரூர், திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்ட த்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் அசூர் அருகில் கட்டளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால், அதனை அடைப்பதற்காக மாயனூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

    இது போன்ற சூழ்நிலையில் பூதலூர் ஒன்றியத்தில் அவ்வப்போது கொட்டி தீர்க்கும் கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. புதிய கட்டளை மேட்டு கால்வாயின் கடைமடை ஏரியாக உள்ள பூதலூர் ஒன்றியம் செல்லப்பன்பேட்டை பெத்தமாதுரான் ஏரியில் முழு கொள்ளளவும் நிரம்பி கடல் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட த்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து பொய்கைகுடி ஏரியை நிரப்பி பூதலூர் ஒன்றிய பகுதி பாசனத்திற்காக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் முழு கொள்ளளவில் தண்ணீரை திறந்து விட்டு அனைத்து ஏரிகளையும் நிரப்பி, பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். #NITIAayog #PetrolDiesel
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக நேற்று உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, ரூ.80.11-ல் இருந்து ரூ. 80.42 ஆனது.

    டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.72.14-ல் இருந்து ரூ.72.35-க்கு விற்பனை ஆனது.

    நாளும் விலை உயர்ந்து, சாமானிய மக்களும், வாகன ஓட்டிகளும் அல்லாடுகிறபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன் வரவில்லை.இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, “வரியைக் குறைக்கும் தகுதி இருக்கிறது. ஆனால் வரி குறைப்பு நடவடிக்கையை மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து செய்ய வேண்டும். விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

    மாநில அரசுகள் 10-15 சதவீத அளவுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். #NITIAayog #PetrolDiesel
    ×