search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solid waste"

    • சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது.
    • வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

    திருப்பூர்:

    வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது. மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்பணி குறித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மழைக்காலங்களில், தொற்றுநோய் பரவாத வகையில் திடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, உள்ளாட்சி பகுதிகள் தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரப்பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வாயிலாக தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
    • துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.

    மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • பாபநாசம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடந்தது.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாஃபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலட்சுமி, கோட்டையம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.
    • குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையின் மையப்பகு தியில் காமராஜர் மா ர்க்கெட் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை புதுப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனால் இங்கிருந்த கடைகள் தஞ்சை மாதாக்கேட்டை சாலை காவேரி நகருக்கு தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தன.இந்த நிலையில்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததால் முறைப்படி இன்று காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து காணொளி வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார், மண்டல குழு தலைவர் மேத்தா , மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.20 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    ×