search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infectious disease"

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது.
    • வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

    திருப்பூர்:

    வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது. மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்பணி குறித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மழைக்காலங்களில், தொற்றுநோய் பரவாத வகையில் திடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, உள்ளாட்சி பகுதிகள் தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரப்பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வாயிலாக தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    உடுமலை,

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.

    டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • போதுமான சுகாதார வசதிகள் இல்லை
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு வெளிநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவு சுகாதார பணிகள் செய்வதில்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 தினங்களாக செங்கம் பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் மழை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

    இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நோயாளிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இது போன்ற சுகாதார சீர்கேடுகளால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கழிவறை கட்டிடத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், அரசு மருத்துவமனை முழுவதும் சுகாதார பணிகளை முழுமையாக செய்யவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்க நேரிட்டால் வெறும் காலில் செல்ல வேண்டாம். வீடுகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ள ஆட்டு உரல், சிரட்டை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்ற வேண்டும்.
    சென்னை

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    * குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து பருக வேண்டும்.

    * வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும்.

    * கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

    * சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

    * திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * கொசுப்புழு உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறத்தில் நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.

    மழைநீரில் தெர்மாகோல் சீட் மூலம் மிதவை அமைத்து அதில் பயணம் செய்யும் மக்கள்.

    மேலும், மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருப்பின் உடனடியாக தங்கள் அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சியின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆவடி மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மழை காலமாக இருப்பதால், பொது மக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும். சூடான உணவு பொருட்களை சாப்பிடுங்கள். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செல்லவும். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்க நேரிட்டால் வெறும் காலில் செல்ல வேண்டாம். வீடுகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ள ஆட்டு உரல், சிரட்டை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×