search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "biodegradable garbage"

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
    • குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் .

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலி யார் இந்து மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் "என் குப்பை என் பொறுப்பு " என்ற தலை ப்பில் மாணவர்களுக்கு நெகிழி பையின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் போட்டித் தேர்வு நடை பெற்றது,சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் துவக்கி வைத்த இப்போட்டியில் 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் சீர்காழி நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

    நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் எனவே ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நமது சீர்காழி நகராட்சி தூய்மையான முதன்மை நகராட்சியாக மாறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • மக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    கும்பகோணம்:

    என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்துடன் திருப்பனந்தாள் பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கும்படி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    பேரூராட்சி சார்பில் தினமும், 2000 கிலோ மேல் குப்பை சேகரமாகிறது. குப்பையை ஒவ்வொரு வீடாக சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பொதுமக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என, தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை பேரூராட்சித் தலைவர் வனிதா ஸ்டாலின் துணைத் தலைவர் கலைவாணி சப்பானி தலைமையில், ஒவ்வொரு வீடாக சென்று, மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க உள்ள 15 வார்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நடன குழுவினர் கரகம் ஆடி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் தமிழக முதல்அமைச்சர் 'மீண்டும் மஞ்சள் பை' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் மஞ்சள் பையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் குருசாமி ரமேஷ் சுரேஷ் தருமதுரை கதீஜா மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    ×