search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு போட்டி தேர்வு
    X

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு போட்டி தேர்வு

    • 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
    • குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் .

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலி யார் இந்து மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் "என் குப்பை என் பொறுப்பு " என்ற தலை ப்பில் மாணவர்களுக்கு நெகிழி பையின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் போட்டித் தேர்வு நடை பெற்றது,சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் துவக்கி வைத்த இப்போட்டியில் 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் சீர்காழி நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

    நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் எனவே ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நமது சீர்காழி நகராட்சி தூய்மையான முதன்மை நகராட்சியாக மாறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×