search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி முதியவர் பலி
    X

    கோப்புபடம். 

    வாகனம் மோதி முதியவர் பலி

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×