search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kambam"

    • கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர்.
    கரூர்,


    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 19-ந் தேதி பூச்சொரிதல், 21-ந் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர். 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவையொட்டி நேற்று மதியம் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து கம்பத்துக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் ஆற்றுக்கு செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையோரத்தில் காத்திருந்து கம்பததை தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் கம்பம் விடப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எஸ்.பி. சுந்தரவதனம், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், தீபா கண்ணன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராமசாமி, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிரேஷ் கண்ணன், பழனி முருகன் ஜுவல்லரி பாலமுருகன், எஸ்.எஸ்.பாலிகிளினிக் டாக்டர் செந்தில் ஆண்டவன், விகேஏ பால் கருப்பண்ணன், கே.எம்.பி.மஹால் செந்தில்குமார், கல்யாண சக்கரவர்த்தி கேஸ் அங்கமுத்து , கே.எஸ். மெஸ் ராஜேந்திரன், திருமலா ஜுவல்லரி சுப்பிரமணி, மதன் கார்ஸ் மதன்குமார், பரமேஸ்வரி கேஸ் ரமேஷ், சாஸ்தா சீட்ஸ் செந்தில்குமார், கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், வி.கே புட்வேர் தாந்தோணி குமார், கரூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெங்கடேஸ்வரன், வள்ளுவர் கல்லூரி நிறுவனர் செங்குட்டுவன், கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேங்க் சுப்பிரமணி, கரூர் அன்பு கரங்கள் சேகர், வழக்கறிஞர் கரிகாலன், ஹோட்டல் சுப்பண்ணா ரவிச்சந்திரன், சுஜித், கரூர் மனநல மைய மருத்துவர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், புகழூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விசா.சண்முகம், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தண்டபாணி, ஸ்ரீ சண்முக ஜுவல்லரி சுப்பிரமணியன், இன்ஜினியர் நல்லுசாமி, ஜெய பிரதீக், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி, சேரன் பஸ் சர்வீஸ் ராஜேந்திரன், ஸ்ரீ டிராவல்ஸ் முருகேசன், கரூர் பயிற்சி மையத்தின் நிறுவனர் ரமேஷ், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடியில் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவும், மேலும் யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது. அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8 வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவுத்திருந்தனர்.

    இந்நிலையில் இது வரை நகராட்சி நிர்வாகமும் மின்வாரியத்துறை அதிகாரிகளோ யாரும் அழைத்துப் பேசாததால் 8வது வார்டில் ஒப்பாரிவைக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திட்டக்குடி நகராட்சி தலைவர்வெண்ணிலா கோதண்டம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து இரண்டு நாட்களில் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கம்பம்:

    கம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர்.

    இன்று காலை காமையகவுண்டன் பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது கவினேஷ் என தெரிய வந்தது.

    அவனது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயம் இருந்தது. மேலும் அவனது கால்சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சிறுவன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப முன் விரோதம் காரணமாக சிறுவனை யாரேனும் கடத்தி கொன்றார்களா? அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×