search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World War I"

    • 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றது
    • உலக நாடுகளில் சிக்கல்கள் நிலவும் சூழலில் மனித உரிமைக்கான அவசியம் வலுப்பெறுகிறது

    உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 10, "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

    1914லிருந்து 1918 வரையில் முதலாம் உலக போரையும், 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலக போரையும் உலகம் சந்தித்தது. இதையடுத்து இதே போன்ற நிலை மீண்டும் தோன்றுவதை தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஒன்றுபட்டு பல முடிவுகளை எடுத்தன.

    அதன் ஒரு தொடர்ச்சியாக 1948ல் டிசம்பர் 10 அன்று, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் ஏற்று கொண்டது.

    தொடர்ந்து 1950ல் இந்த பிரகடனம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து டிசம்பர் 10 "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

    உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றை கோருவதற்கும், எந்த வித்தியாசங்களும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்குமான நோக்கத்துடன் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் (UDHR) மக்களிடையே இனம், நிறம், மதம், பாலினம், மொழி, நாடு உள்ளிட்ட எந்த வித்தியாசமுமின்றி மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷியா-உக்ரைன் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம், சூடான் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட உலகளாவிய பதட்டமான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கான அவசியம் மேலும் வலுவடைந்துள்ளது.

    பிரகடனப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இது குறித்து பேசிய ஐ.நா. கூட்டமைப்பின் தலைவர் வால்கர் டர்க் (Volker Turk), "உலகம் பல சிக்கல்களாலும், நெருக்கடியாலும் சூழப்பட்டிருந்தாலும் மனித உரிமைகள் தோற்கவில்லை" என கூறினார்.

    2023க்கான மனித உரிமை தின கருப்பொருள் "சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி" என்பதாகும்.

    • 30 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது
    • 82 இஸ்ரேல் ஆதரவாளர்களை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது

    அக்டோபர் 7 தொடங்கி பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர், 1 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை தொடர்கின்றன. மேலும், அங்கெல்லாம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவாக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    1918ல் முதலாம் உலக போரை (World War I) நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையை துவங்கவும் நவம்பர் 11 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் இந்த நாள், "ஆர்மிஸ்டைஸ் தினம்" (Armistice Day) என கொண்டாடப்பட்டு, 11-ஆம் மாதம் (நவம்பர்), 11-ஆம் தேதி, காலை 11:00 மணியளவில் இரண்டு நிமிட அமைதி கடைபிடிக்கப்படும்.

    நேற்று, ஆர்மிஸ்டிஸ் தினத்தின் போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பங்கு பெற்ற ஒரு போராட்டம் லண்டனில் உள்ள ஹைட் பார்க் கார்னர் (Hyde Park Corner) பகுதியில் நடைபெற்றது.

    மிக பெரிய அளவில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஹமாஸ் அமைப்பினருக்கும், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். "பாலஸ்தீனத்தை விடுதலை செய்", "உடனடி போர்நிறுத்தம் தேவை", "நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரம் பெற வேண்டும்" போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

    அதில் பங்கு பெற்ற ஆதரவாளர்கள், "உக்ரைன் சுதந்திரத்திற்கு குரல் எழுப்பும் நாடுகள், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

    இவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இஸ்ரேல் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை லண்டன் நகர் காவல்துறை தடுத்து விட்டது. அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் லண்டன் பெருநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் அத்துமீறலை காவல்துறை கண்டிக்கவில்லை என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் லண்டன் பெருநகர காவல்துறை, பாலஸ்தீன ஆதரவாளர்களின் வன்முறை செயலை கண்டுகொள்ளாமல் விடுவதாக குற்றம் சாட்டினார். இவர் கருத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது.

    ×