search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna award"

    • போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் சார்பில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு அண்ணா விருதுடன், ரூ.10 ஆயிரம் வெகுமதியும், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதுடன் ரூ.5 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன் மற்றும் காளியப்பன் ஆகியோருக்கும் அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    • இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023 -ம் ஆண்டிற்கு மாநில அளவிலான விருதிற்கு உயிர் காக்கும் துணிச்சலான செயல் மற்றும் உடமைகள் மீட்டெடுத்தமை போன்ற செயல்புரிந்த அரசு ஊழியர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். 14.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துரு வினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    • வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றுள்ளார்

    கோவை

    தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றுள்ளார்.

    இதேபோன்று கோவை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், உக்கடம் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். போலீஸ் ரெக்ரூட் பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பாலு, கிரைம் பிரென்ச் சி.ஐ.டி சப் -இன்ஸ்பெக்டர் ருக்குமணி, கோவை போலீஸ் டெலி கம்யூனிகேஷன் பிரான்ச் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 8 போலீசார் அண்ணா விருதுக்கு தேர்வாகி யுள்ளனர். இவர்களுக்கு அண்ணா பதக்கமும், ரூ.10 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படும்.

    கோவை மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார், மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×