என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
- மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






