விஜய்க்கு போதுமான அளவு பக்குவம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்

தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது. பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.
விஜய்க்கு போதுமான அளவு பக்குவம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவரிடம் கரூர் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?, அவரை பார்த்து தி.மு.க. பயப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த துரைமுருகன் தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது. எவரையும் பார்த்து அஞ்ச வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை. பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.

தொடர்ந்து தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் எந்த குற்றச்சாட்டு கண்டும் தி.மு.க. அஞ்சாது. விஜய்க்கு போதுமான அளவுக்கு பக்குவம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com