என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "party executives"
- கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது.
- கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. எனினும் இன்று காலை நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சாமி ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திடீர் என பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மீறி நாம்தமிழர் கட்சியினர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
- மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம் ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், செல்வம், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள் ,மாவட்டத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறும் போது பொதுமக்கள் அனைவரிடமும் தேசப்பற்றை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 75- வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.
கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.

சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கேரள அரசியலில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இன்று அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கு ராகுல்காந்தி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சமீபத்தில் மரணம் அடைந்த காங்கிரஸ் எம்.பி. ஷாநவாஸ் வீட்டிற்குச் செல்லும் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
அதன்பிறகு கொச்சி அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொச்சி மரைன் டிரைவில் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
மாலை 6 மணிக்கு கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #RahulGandhi #Congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
