search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party executives"

    • இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

    உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

    • கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது.
    • கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.

     கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. எனினும் இன்று காலை நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சாமி ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திடீர் என பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். 

    அப்போது கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மீறி நாம்தமிழர் கட்சியினர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம் ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், செல்வம், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள் ,மாவட்டத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறும் போது பொதுமக்கள் அனைவரிடமும் தேசப்பற்றை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 75- வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கேரளாவிற்கு இன்று வருகை தரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RahulGandhi #Congress
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.

    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.



    கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தில் மட்டும் 2 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். இது அந்த கட்சியின் நிர்வாகிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கேரள அரசியலில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இன்று அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கு ராகுல்காந்தி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சமீபத்தில் மரணம் அடைந்த காங்கிரஸ் எம்.பி. ஷாநவாஸ் வீட்டிற்குச் செல்லும் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    அதன்பிறகு கொச்சி அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொச்சி மரைன் டிரைவில் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

    மாலை 6 மணிக்கு கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #RahulGandhi #Congress

    ×