search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவந்தா ஊராட்சியில்  இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    கண் சிகிச்சை முகாம் நடந்தபோது எடுத்தபடம்.

    கருவந்தா ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

    • கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தென்காசி:

    வீரகேரளம் புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் நெல்லை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை யேசுராஜா, யேசுதாசன் மற்றும் சவுந்தர் , முகாம் ஒருங்கினப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருவந்தா ஊராட்சி உடன் இணைந்து செய்து இருந்தனர்.

    Next Story
    ×