search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Statue"

    • அண்ணா சிலைக்கு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமூகரெங்க புரத்தில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் ஆனந்த், மாவட்ட அறங்கா வல் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, படையப்பா முருகன், பரிமளம், ஞானசர்மிளா கெனிஸ்டன், ஊராட்சி தலை வர்கள் அந்தோனி அருள், முருகேசன், மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, நவ்வலடி சரவணகுமார், ராதாபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் அரவிந்தன், சிதம்பரபுரம் முருகன், மாவட்ட சிறுபா ன்மை அணி மூர்த்தி, கருனை ராஜ், தக்காளி குமார், கல்கண்டு, சார்லஸ் பெஸ்கி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், புளியடி குமார், எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, முத்து, முத்தையா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சிலைக்கு தி.மு.க- அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயலாளர் பால் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலா ளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன், முரளி வினோத், ராஜசேகர், அரவிந்த் முருகன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

    அழகர்கோவில் கோட்டைவாசல் முன்புள்ள அண்ணா சிலைக்கு பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன்.

    மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் துணைச் செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, அ.வலையபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, அய்யாபட்டி நயினான், சென்னகரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சிலைக்கு ஓ.பி.எஸ்.அணி-அ.ம.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர்.

    காரைக்குடி

    அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலா ளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர். இதில் அ.ம.மு.க. மாநில பொறி யாளர் அணி துணை தலைவர் சரவணன், தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின் குமார், பொதுக் குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட ஓட்டுநர் அணி மங்கலம் பூமி, சிறுபான்மை அணி மாவட்ட துணை செயலா ளர் மாலிக்கான், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பாரதி, நகர இணை செயலாளர் ராஜா, இலக்கிய அணி முத்துக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் கல்கீஸ்வரன். இளைஞரணி செயலா ளர் கணேசன், எம்.ஜி.ஆர் மன்றம் தர்மராஜ், மாணவர் அணி முருகேசன், பாசறை சஞ்சய், நகர தலைவர் மைக்கேல், வட்ட செய லாளர்கள் சேகர், சக்திவேல், சையது, ராஜா, பாண்டியன் மற்றும் ஓ.பி.எஸ் அணி மாநில இளை ஞரணி இணை செயலாளர் திரு ஞானம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, மாவட்ட பேரவை செயலாளர் அங்குராஜ், நகர பேரவை செயலாளர் ரவி உள்பட இரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கல் திரளாக கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    • நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., மேயர் சரவணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா ரவி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், கிரிஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள் மணி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கவுன்சிலர்கள் உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், இந்திரா மணி, கந்தன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி உள்பட கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் தலைமையில் துணை மேயர் ராஜு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேயர் சரவணன், மண்டல சேர்மன் மகேஷ்வரி, கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கந்தன், கோகுலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மேயர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இதையடுத்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    • காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

     காரைக்குடி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த விசி.மோட்டூரில் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து வாலாஜா நகரத்தில் உள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் காந்தி தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி வினோத்காந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி, நகர செயலாளர் தில்லை உள்பட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு
    • கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (ராணிப்பேட்டை) தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    இதனை யொட்டி நேற்று ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், முரசொலிமாறன் ஆகியோரது உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வீசி.மோட்டூர் பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அமைச்சர் காந்திக்கு திமுக வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஏ.வி. சாரதி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    முன்னதாக காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக, பேரணியாக வந்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர் துணைத் தலைவர் உதய சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, தொழிலதிபர் பிளாசா சேகர், ஒன்றிய மாணவரணி சோமசுந்தரம், புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுதாஹிர், சரவணன், பசீர் அகமது, பழக்கடை அஜீஸ், பேச்சாளர் ஷாஜகான், வார்டு பொறுப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆசை தம்பி, மதுரை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ஈரோடு சாமி, சிவகங்கை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலா, காரைக்குடி திருஞானம், திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகேசன், புதூர் கு.மா.காந்தி, நெற்குப்பை நகர பொறுப்பாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய பொறு ப்பாளர்கள் செந்தில்குமார், பித்திரை செல்வன், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்த நாளையொட்டி தி.மு.க சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து சந்திப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.

    தி.மு.க சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, அவைத் தலைவர் சுப. சீதாராமன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யூனியன் சேர்மன் கே. எஸ். தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த்், கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் உலகநாதன், கோகுல வாணி, பவுல்ராஜ், ரவீந்தர்், கிட்டு மற்றும் நிர்வாகிகள் எஸ்.வி. சுரேஷ், புவனேஸ்வரி, ஆவின் ஆறுமுகம்், பேச்சி பாண்டியன், வேலங்குளம் முருகன், வக்கீல் தினேஷ், வல்லநாடு முத்து உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தச்சநல்லூர்

    நெல்லை மாநகரத்தின் முன்னாள் தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாலை ராஜா தலைமையில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் தச்சநல்லூரில் உள்ள அண்ணா சிலை மற்றும் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், தச்சநல்லூர் பகுதி செயலாளர் முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க மணி, அருண்குமார், பூக்கடை அண்ணாதுரை, அப்துல் கயூம், நெல்லை கோபி, அருள்மணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞர் அணி மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.

    அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து சந்திப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி முத்துக்கருப்பன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பெரிய பெருமாள், மாநில எம்.ஜி.ஆர். மன்றம் கல்லூர் வேலாயுதம், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், சக்தி குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஆவரை பால்துரை, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை சீனி முகமது சேட், பாறையடி மணி பக்கீர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் அவை தலைவர் நேமிநாதன், பொருளாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×