search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் காந்தி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
    X

    அமைச்சர் ஆர்.காந்தி விசி.மோட்டூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    அமைச்சர் காந்தி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

    • ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு
    • கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (ராணிப்பேட்டை) தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    இதனை யொட்டி நேற்று ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், முரசொலிமாறன் ஆகியோரது உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வீசி.மோட்டூர் பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அமைச்சர் காந்திக்கு திமுக வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஏ.வி. சாரதி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×