என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி பயணம்"
- டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்தனர்.
- மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார்.
டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு இரவு விருதுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். எனவே இந்த வருகை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது பல தடைகளை விதித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புதின் ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு, பின்னர், ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை, பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்பார்.
- இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
- இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியிடம் புதின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
- புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி காவல்துறை மற்றும் NSG அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர்.
NSG,டெல்லி காவல்துறை, ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோக்களும் இந்தப் பாதுகாப்பில் பணியாற்றுவர்.
இந்தப் பயணத்தின் புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
- பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
- செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.
இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
- ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
- ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
இதனிடையே த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றார். அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆதவ் அர்ஜூனா செல்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கூடைப்பந்து தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ள ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம், உண்மை வெளிவரும்" என்று தெரிவித்தார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
- கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணிக்கிறார்.
அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆதவ் அர்ஜூனா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்தித்துள்ளார்.
அப்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பயணம்.
- டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
- பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைவர் நியமனம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியவரும் சந்திக்க உள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
- கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்குமிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.
இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றார்.
இந்நிலையில், இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.






