என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi trip"

    • பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
    • செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.

    அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.

    இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.

    அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.   

    • பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார்.
    • விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

    அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
    • இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

    அதன்படி நாளை (செப்டம்பர் 27) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கின்றனர். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.

    டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எம்.பி. கலாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    ×