என் மலர்
நீங்கள் தேடியது "Supreme Court Judge"
- உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
- எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர் மார்க்கண்டே கட்ஜு. இவர் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது.
அதாவது, நீதிபதி பணியில் இருந்தபோது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தந்ததாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சர்ச்சையாகி பலரும் குறிப்பாக உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பதிவுக்கு கட்ஜு மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், "நகைச்சுவையாக மட்டுமே சமூக தளத்தில் அதை பதிவிட்டேன்; உடனே அதை நீக்கியும் விட்டேன்.
எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
- 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.
தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.
மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.
அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.
எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விபரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் பரிந்துரை.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
- அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.
ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் மே.வங்காள அரசு சார்பில் வக்கீல்ஆக ஆஜராக போவதாகவும் கூறினார்.
அதை தொடர்ந்து விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு பெஞ்ச் ஒத்தி வைத்தது. #SaradhaScam #CBI
பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு தடை விதித்தது.
அதே போல் வனொலிகளில் இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் லாகூர் ஐகோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை மீண்டும் அமல்படுத்தினர். இந்த நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பேசிய தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார், “இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கிறது” என காட்டமாக கூறினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆண், பெண் உறவு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் ஆண், பெண் உறவு பற்றி தீர்ப்பு வழங்கிய தீபக்மிஸ்ராவின் மனைவிக்கு டெல்லியில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்புவதற்காக அல்வா மற்றும் மல்லிகை பூ ஆகியவற்றை பார்சல் செய்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பார்சலை அனுப்ப தபால் நிலையத்துக்குள் சென்றனர். இதை அறிந்த விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புக்குழு செயலாளர் ஆசைத்தம்பி, தேவா, பாலாஜி உள்பட நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #DipakMisra #SupremeCourt
கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.
அப்போது, ‘கேளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது. #KeralaFlood #SupremeCourt






