search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Flood Relief"

    வர்மா படத்துக்காக தான் பெற்ற முதல் சம்பளத்தை, நடிகர் விக்ரமின் மகன் துருவ் கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார். #Varma #DhruvVikram
    விக்ரம் மகன் துருவ், வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இது. இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், துருவ் விக்ரமின் தோற்றமும் பேசப்பட்டு வருகிறது.

    இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் துருவ்வை அறிமுகம் செய்து வைக்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குநர் பாலா, விக்ரம், துருவ் விக்ரம், மேகா சவுத்ரி, ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.



    இதற்கிடையே, வர்மா படத்தில் நடித்ததற்காக தான் பெற்ற முதல் சம்பளத்தைக் கேரள வெள்ளத்துக்கு அளித்துள்ளார் துருவ். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாகத் தன் முதல் பட சம்பளத்தைத் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா மற்றும் இணை தயாரிப்பாளர் அனூப்புடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அளித்துள்ளார். #Varma #DhruvVikram #KeralaFloodRelief

    கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த 25 பவுன் தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர். #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது.

    கேரளாவின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளும் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ஏழை, எளிய மக்களும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

    இந்த மாதா சிலை 19-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மஞ்சுமாலில் உள்ள ஆலயத்தில் நிறுவினர். ஆலயத்திற்கு வரும் மக்கள் மாதாவுக்கு காணிக்கையாக தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்களும் வழங்கினர்.

    இதில் மாதாவுக்கு 25 பவுன் எடையில் தங்க நெக்லஸ் செய்யப்பட்டு மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் ஏற்பட்ட சேதங்களுக்காக திரட்டப்படும் நிவாரண நிதிக்கு இந்த தங்க நெக்லசை வழங்க ஆலய நிர்வாகம் முன் வந்தது.

    இதுபற்றி ஆலய பங்கு தந்தை வர்க்கீஸ் தனிச்சக்காட்டு கூறும்போது, மாதா அணிந்த நகையை நன்கொடையாக வழங்க முன் வந்தது மூலம் மற்றவர்களும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுவார்கள் என்று நம்புகிறோம். மாதா ஆலயம் அமைந்துள்ள மஞ்சுமால் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இங்கு நிவாரண பணிகளுக்காக நாங்கள் இதனை நன்கொடையாக வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வாரப்புழா ஆர்ச் டயோசீஸ் ஆயரும் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களை ரத்து செய்து விட்டு அதற்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் ஆயர் பயன்படுத்தி வந்த காரையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  #KeralaFloodRelief
    கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. #Leptospirosis #RatFever #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. 

    இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர். 

    நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Leptospirosis  #RatFever #KeralaFloodRelief 

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு பணியாளர்கள் ஒரு நாள் சம்பளம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #KeralaFlood
    சென்னை:

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதன் நிவாரணத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏற்கனவே ஒரு நாள் சம்பளம் வழங்கி இருக்கின்றனர். அதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அந்த மாநிலத்தின் மறுவாழ்வு பணிகளுக்காக வழங்கியுள்ளனர். அதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, கடுமையான இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து, கேரள நிவாரணத்துக்காக ஒரு நாள் சம்பளத்தை அளிக்கலாம் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தானாக முன்வந்து அளிக்கப்பட்ட அந்த தொகையை ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம், சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.

    அந்த தொகை, கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கணக்கை கையாளும் திருவனந்தபுரம் எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் நேரடியாக பற்று வைக்கப்பட்டுவிடும்.

    அரசின் இதற்கான உத்தரவு, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் பொருந்தும். தானாக முன்வந்து இந்த உதவி அளிக்கப்படுவதை, சம்பளபட்டுவாடா அதிகாரி உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #KeralaFlood
    கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நடிகைகள் மகிழ்வித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகள் முழுமையாக இழந்தவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தொடர்ந்து முகாமிலேயே தங்கியுள்ளனர்.

    மாநிலம் உள்ள முகாம்களில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் முகாமிலேயே தங்கி பரிதவித்து வருகிறார்கள்.

    அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். நிவாரண உதவிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    முகாம்களில் சோர்வுடன் இருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் களமிறங்கினர். பத்தனம்திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

    மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர். தங்களுடன் நடிகைகள் அமர்ந்து பாடுவதை கேட்ட குழந்தைகள், முகாம்களில் தங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதேபோல பிரபல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரள மந்திரி கடகம்பிள்ளை சுரேந்திரன், கலெக்டர் வாசுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்பதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFloodRelief
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை கட்சியின் பொது செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 100 தொண்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    இம்மாநாடு ம.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாடாகவும், தந்தை பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடாகவும் நடக்கிறது. இதில் அனைத்து தோழமை கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில்லை என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் மனிதாபிமானத்திற்கும், நாடுகளிடையே நட்புறவு மலர்வதற்கும் சரியானதாக இருக்கும். எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தி.மு.க.வை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.

    தமிழக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால் முடங்கி கிடக்கிறது. மணல் கொள்ளையை தடுக்காததாலும், தடுப்பணைகளை முறையாக கட்டாததாலும், முக்கொம்பு, மேலணை போன்ற அணைகளை பராமரிக்காததாலும் தமிழகத்திற்கு பெரும் துயரமும், துன்பமும்தான் ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, மாநில அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினர் செந்தில் அதிபன், மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். #MDMK #Vaiko #KeralaFloodRelief
    கேரள வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். #KeralaFlood #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அப்போது, ‘கேளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது. #KeralaFlood #SupremeCourt
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றிருக்கிறார். #ARRahman #KeralaFlood
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

    வெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. ஆனாலும், தேவை அதிகமிருப்பதால், உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் கேரள மக்கள். 

    இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடினார். 



    அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும் உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது.
    பிரபல மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தனது முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #PoonamPandey
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள். 

    இந்நிலையில், பிரபல மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #PoonamPandey
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தற்போது நடிகர் ஜெயம் ரவி 10 லட்சமும், நடிகர் பிரபு 10 லட்சமும், நடிகை கீர்த்தி சுரேஷ் 10 லட்சமும் வழங்கியுள்ளார்கள்.



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், விக்ரம், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #ARMurugadoss
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், விக்ரம், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #ARMurugadoss
    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Vikram
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விக்ரம் தன் பங்குக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Vikram
    ×