search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indira Banerjee"

    வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும் என சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி கூறியுள்ளார். #SupremeCourt #IndiraBanerjee
    புதுடெல்லி:

    நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.



    கடந்த 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்) ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.

    அப்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வக்கீல்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வக்கீல்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

    இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார்.

    பெண் நீதிபதியின் இந்த குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SupremeCourt #IndiraBanerjee
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். #IndiraBanerjee #SCJudges
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. ஜனாதிபதி கையொப்பமிட்டதும், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.



    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உள்ளனர். #IndiraBanerjee #SCJudges

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள இந்திரா பானர்ஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. #IndiraBanerjee #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் இந்திரா பானர்ஜி. ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோருடன் இந்திரா பானர்ஜியையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 

    கொலிஜியத்தின் பரிந்துரையை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில், ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை முதல்வர் எடப்பாடிபழனிசாமி இன்று சந்தித்தார்.

    அப்போது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    இந்திரா பானர்ஜி கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee
    #EdappadiPalaniswami
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 
    கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜியை, சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி :

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோருடன் உத்ரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் பெயரை மீண்டும் கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதற்கான உத்தரவு திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரிம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    ×