என் மலர்
நீங்கள் தேடியது "Ram nath Kovind"
- ராம்நாத் கோவிந்த் இறுதிக்காலம் வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசிக்கலாம்.
- அவருக்கு மாதம் ரூ.2½ லட்சம் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
புதுடெல்லி :
புதிய ஜனாதிபதியாக நேற்று திரவுபதி முர்மு பதவி ஏற்றதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புதிய பங்களாவுக்கு புறப்பட்டார்.
டெல்லி ஜன்பத் சாலை 12-ம் எண் முகவரியில் உள்ள பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நீண்ட காலமாக குடியிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய மகன் சிராக் பஸ்வான் எம்.பி. குடியிருந்தார்.
மத்திய அரசின் நோட்டீசை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வீட்டை காலி செய்தார். பின்னர், ராம்நாத் கோவிந்த் ஓய்வுக்கு பிறகு தங்குவதற்காக வீடு தயார் செய்யப்பட்டது.
அந்த பங்களாவுக்கு ராம்நாத் கோவிந்த் காரில் சென்றார். மரபுப்படி, புதிய ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவருடன் சென்றார்.
பங்களாவில், மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர். அதுதொடர்பான புகைப்படத்தை கிரண் ரிஜிஜு, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.,
ஜனாதிபதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சட்டப்படி, ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும். மாத ஊதியத்தில் 50 சதவீதம், அதாவது ரூ.2½ லட்சம் அவருக்கு மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.
தனது இறுதிக்காலம்வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்கலாம். அவருக்கு ஒரு தனி செயலாளர், ஒரு கூடுதல் தனி செயலாளர், ஒரு தனி உதவியாளர், 2 பியூன்கள் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள். அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
இலவச மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும். விமானம், ரெயில், கப்பல் ஆகியவற்றில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம். 2 தொலைபேசிகள் (அகண்ட அலைவரிசை இணைப்புக்காக ஒன்று உள்பட), தேசிய ரோமிங் வசதியுடன் செல்போன், ஒரு கார் அல்லது கார் வைத்துக்கொள்வதற்கான படிகள் ஆகியவை வழங்கப்படும்.
ஒருவேளை, அவர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஓய்வுபெற்ற துணை ஜனாதிபதிக்கான சலுகைகள் எதுவும் அளிக்கப்படாது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் வாழ்க்கை துணைக்கும் நிறைய சலுகைகள் உண்டு. அவருக்கு டெல்லியில், வாடகை இன்றி பங்களா ஒதுக்கப்படும். அதற்கான பராமரிப்பு செலவும் அளிக்கப்படும்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி பெற்றதில் 50 சதவீத தொகை, அவருக்கு மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். இறுதிக்காலம்வரை மருத்துவ சிகிச்சை உண்டு. தனி செயலாளர், பியூன் ஆகியோருடன் அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்வரை கிடைக்கும்.
ஒரு இலவச தொலைபேசி, கார் ஆகியவையும், ஒரு நபரை துணைக்கு வைத்துக்கொண்டு, ஆண்டுக்கு 12 தடவை இந்தியாவில் உயர்வகுப்பு பயணமும் செய்யலாம்.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் நாளை வெளியேறுகிறார்.
இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாளை இரவு 7.00 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.
- இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர்.
- மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
ஜனநாயகத்தின் கோயிலாக பாராளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.
கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாகக் கையாண்டது.
மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.
திரவுபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் என தெரிவித்தார்.
- திரவுபதி முர்மு, வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, உள்ளிட்டோர் பங்கேற்பு.
- பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்துடன் பங்கேற்றார். மேலும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.
- உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.
- நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்து உள்ளது.
டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா. இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது. பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆதரவற்ற பெண்களுக்கான சமூக, தார்மீக உரிமைகள் பாதுகாப்பை ஊக்குவிக்க வேண்டும்.
- நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
பிருந்தாவனம்:
உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா குடிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு. நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் இருந்து வருகின்றன. குழந்தை திருமணம், சதி, வரதட்சணை, விதவை வாழ்க்கை போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள்.
ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்த பிறகு, அந்தபெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாய போக்கும், அவருக்கு எதிரானதாக மாறிவிடும். கணவனை இழந்த விதவை பெண்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை தடுத்து நிறுத்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்ந்த மகான்களும், சமூக சீர்திருத்த வாதிகளும், இதுபோன்ற தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கடினமான வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாக சாகர் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் இத்தகைய முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்ற போதிலும், இதில் இன்னும் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
கிருஷ்ணா குடில் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக, மறுமணம், பொருளாதார சுதந்திரம், குடும்ப சொத்தில் சம பங்கு மற்றும் ஆதரவற்ற பெண்களின் சமூக மற்றும் தார்மீக உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



அதன்பின்னர் ஆஸ்திரேலிய கடற்படை தலைமையகத்திற்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அங்கு அவரை ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் வரவேற்றார். அப்போது ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும் 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கான்பெராவில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதுபோன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் இந்த மரியாதை அளிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #IndianPresident #RamNathKovind