என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எமர்ஜென்சி"

    • ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
    • ராணுவத்தினருக்கு எதிரான மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த 2020-ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.

    அவசர நிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலில் மோசடி நடைபெற்றதால்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது.
    • மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை.

    நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்த நிலையில், அவசரநிலை தினத்தை பாஜக கையில் எடுப்பது, அரசின் தோல்வியை மறைப்பதற்கானது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    இந்தியா சுதந்திரம் பெற்றதில் மற்றும் அரசியலைப்பு உருவாக்கப்பட்டதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு ஏதும் இல்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறது அதை கையில் எடுத்து, அரசியலைப்பை பாதுகாப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை. அரசியலமைப்பு பாதுகாப்போம் எனப் பேசிக் கொண்டிருப்பவர்கள், தற்போது 50 வருடத்திற்குப் பிறகு எம்ர்ஜென்சியை கையில் எடுத்துள்ளனர். சிலர் இதை மறந்திருப்பார்கள். இவர்கள் தோண்டி எடுக்கிறார்கள்.

    மனுஸ்மிருதியின் கூறுகள் போன்ற நம்முடைய கலாசார அம்சங்கள் இல்லை என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பை நிராகரித்தன. இதை செய்த அவர்களுக்கு தற்போது ஞானமடைந்துள்ளனர்.

    இவர்கள் ஆட்சியில் தோல்வியடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு பதில் அளிக்காதது, ஊழல், பொருளாதார தோல்வி குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    பொருளாதார சமநிலை மிகப்பெரிய அளவில் இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலையை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக நாடாளுமன்றத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக கங்கனா தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.


    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. படப்பிடிப்பை ஆரம்பித்தபோது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை.


    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள். ஆனால் நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    • நடிகை கங்கனா தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    கங்கனா -ஜி.வி.பிரகாஷ்

    இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின்'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
    • இவர் தற்போது முன்னணி கதாநாயகர்களின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், கள்வன், டியர், அடியே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.



    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக இந்தியாவின் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளேன் அதை அவர் தான் அறிவிக்க வேண்டும். அவர் சர்வதேச இயக்குனர். இந்தியாவின் டாப் இயக்குனர் அவர் படத்தில் நான் நடிக்கும் அறிவிப்பை அவரே கொடுப்பார்" என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் எந்த இயக்குனருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

    • இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
    • இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 




    • 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
    • எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

    1975-ம் ஆண்டு இந்தியா வில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்

    பட்டது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.

    இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

    • நடிகை கங்கனா இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.


    ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


    எமர்ஜென்சி போஸ்டர்

    இந்நிலையில், 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?.
    • அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதாரம், எமர்ஜென்சி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    இந்த நிலையில் மத்திய அரசு தயார் செய்த ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது என எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    நான் கூறுவது இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது குறித்தது. இது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?. அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    முதலீடு இருந்தால் நாம் அதிக வளர்ச்சியை பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்க முடியாது. இது நமது எண்ணிக்கையை மேம்படுத்தலாம் ஆனால் விவசாயிகள், ஏழைகள் மற்றும் மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது. எமர்ஜென்சியின் போது ஜெயிலில் இருந்தவர்களுக்கு பாஜக என்ன செய்தது?. சமாஜ்வாடி அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, பென்சன் வழங்கியது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

    அரசால் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்-ஐ ஜனாதிபதி படித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை பாஜக இன்னும் உணரவில்லை. பாஜக 303-ல் இருந்து 240-க்கு வந்ததை உணராததுதான் அரசின் பிரச்சனை. 303 மெஜாரிட்டி அடிப்படையில் இந்த உரை தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அரசாங்கம் உண்மையில் மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினார் (இநதிய மக்கள் நிலையான அரசை தனி மெஜாரிட்டியுடன் 3-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளதாக உலகம் பார்க்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்).

    காங்கிரஸ் தலைவர் தரிக் அன்வர்

    பழைய உரைகளில் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதி உரையில் புதிதாக ஏதும் இல்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு ஏராளமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

    • பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர்.
    • எமர்ஜென்சி விவகாரத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தனியார் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய கட்டுரையில் கூறியதாவது:

    பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் எதுவும் மாறாதது போல் அவர் தொடர்கிறார்.

    பிரச்சாரத்தின் போது தனக்கு தெய்வீக அந்தஸ்தை வழங்கிய ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியைக் குறிக்கிறது.

    எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட விவகாரம் பிரதமராலும், அவரது கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டதாகவும், இவ்விஷயத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.

    எமர்ஜென்சி பிரகடனத்தை அடுத்து நடந்த தேர்தலில் 1977, மார்ச்சில் நம் நாட்டு மக்கள் ஒரு திட்டவட்டமான தீர்ப்பை வழங்கினர். அந்தத் தீர்ப்பு தயக்கமின்றி, சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அதன்பின், 3 ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு வெற்றியை மோடி மற்றும் அவரது கட்சி ஒருபோதும் பெற்றதில்லை. இவையெல்லாம் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

    நாடுமுழுவதும் பல குடும்பங்களை அழித்த வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு மௌனமாக உள்ளது. மக்கள் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பும். பிரதமரும் அவரது அரசாங்கமும் சாதகமாக பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

    கடந்த 10 ஆண்டுகளில் என்.சி.இ.ஆர்.டி, யு.ஜி.சி. போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்முறை ஆழமாக சேதமடைந்துள்ளது.

    எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் பாராளுமன்றத்தில் சமநிலை மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்- மத்திய அரசு
    • 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் கடந்த காலத்தை பாஜக பார்க்கிறது- ராவத்

    50 வருடத்திற்கு முன் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை பாஜக பார்க்கிறது. அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    எமர்ஜென்சி அறிவித்து 50 வருடங்கள் ஆகிறது. பாஜக இன்னும் கடந்த காலத்தை பார்க்கிறது. நாட்டின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி போன்ற நிலை தற்போது உள்ளது. யாரை வேண்டுமென்றாலும் பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    நீதிமன்றங்கள் மீது நெருக்கடி உள்ளது. மத்திய அமைப்புகளை அரசு நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வருகிறார்கள். ஊழல், அராஜகம் அதிகரித்து வருகிறது. சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. அந்தக் காலத்திலும் இதே நிலைதான். இந்திராஜி மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றினார்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    எமர்ஜென்சி அறிவித்தபோது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் சிவசேனா எமர்ஜென்சியை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×