search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் உடன்பாடு கிடையாது: கமிட்டிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
    X

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பதில் உடன்பாடு கிடையாது: கமிட்டிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

    • பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
    • சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.

    இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×