search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pralhad Joshi"

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் தெரியாது.
    • மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். அதில் "மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. எதற்காக இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது என்ற காரணம் எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு அரசு அலுவல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது."

    "பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

     

    இதற்கு பதில் அளித்து இருக்கும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, "காங்கிரஸ் கட்சிக்கு குடியரசு விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் துளியும் நம்பிக்கையே இல்லை. பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பழக்கமாக மாறிவிட்டது."

    "பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டுவது தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வமான மற்றும் பாராளுமன்ற விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன. இதன் காரணமாக எதிர்கட்சியினர் வரவிருக்கும் பாராளும்ற சிறப்பு கூட்டத்தை ஆரோக்கியமான ஒன்றாகவும், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவும் வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது.
    • வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

    பெங்களூரு :

    ரெயில்வே துறை சார்பில் நேற்று பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தார்வார் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

    விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த ரெயிலில் கவர்னர் மற்றும் பிரகலாத்ஜோஷி ஆகியோர் பயணம் செய்தனர். இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-

    நாடு முழுவதும் ரெயில்வே துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் பணிகளில் ரெயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ரெயில்வே துறை நாட்டின் போக்குவரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்வதுடன் நாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்தியா, ரெயில்வே தொடர்பு வசதிகளில் உலகின் 4-வது பெரிய நாடாக விளங்குகிறது.

    நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது. மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரூ.47 ஆயிரத்து 346 கோடி மதிப்பீட்டிலான ரெயில்வே உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கர்நாடகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 561 கோடி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 55 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள வந்தேபாரத் ரெயில் தென் கர்நாடகம், வட கர்நாடகத்தை ஒருங்கிணைக்கிறது. வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது நமது நாட்டின் கவுரவத்தை உயர்த்துவதாக உள்ளது.

    இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசியதாவது:-

    பெங்களூரு-தார்வார் இடையே அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வட கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது வந்தேபாரத் ரெயில் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெலகாவி பாதையில் இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இதுவரை 23 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்களின் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் தார்வாரில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரெயில் புறப்படும் இடம் பெங்களூரு. அதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பிரகலாத்ஜோஷி பேசினார்.

    • இந்தியாவின் அடிப்படையே அதன் கலாசாரம்தான்.
    • உங்களைப் போன்று அன்னிய மண்ணில் நாட்டை இழிவுபடுத்துவது அல்ல.

    புதுடெல்லி :

    அமெரிக்காவில் சாண்டா கிளாராவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது அவர் பிரதமர் மோடியை கிண்டலடித்தார். "இந்தப் பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதை பிரதமர் மோடி, அந்தக் கடவுளுக்கே விளக்குவார்" என அவர் கூறினார்.

    இது சர்ச்சையாகி இருக்கிறது.

    ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    ஒன்றுமே தெரியாத ஒருவர் திடீரென எல்லாம் அறிந்த நிபுணராக மாறியது வேடிக்கை. அவரது வரலாற்று அறிவு, அவரது குடும்பத்தைத் தாண்டிச் செல்லாது. அவர் வரலாற்றைப் பற்றி பேசுகிறார்.

    உருளைக்கிழங்கில் இருந்து தங்கத்தை விளைவிப்பதாக கூறிக்கொண்ட ஒரு மனிதர் அறிவியல் பற்றி விரிவுரை ஆற்றுகிறார். குடும்ப விவகாரங்களைத் தாண்டிச் செல்லாத மனிதர், இந்தியாவின் போர் முறையை வழிநடத்த விரும்புகிறார்.

    அப்படி இல்லை, திரு போலி காந்தி. இந்தியாவின் அடிப்படையே அதன் கலாசாரம்தான். உங்களைப் போன்று அன்னிய மண்ணில் நாட்டை இழிவுபடுத்துவது அல்ல. இந்தியர்கள் தங்கள் வரலாறு குறித்து மிகவும் பெருமைப்படுகிறவர்கள். அவர்கள் தங்கள் புவியியலை மிக நன்றாக பாதுகாத்துக்கொள்கிறவர்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    • திருப்பதிக்கு படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
    • கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தாலும், இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இதற்காக ஏழுமலையானை நடந்து சென்று அவர் தரிசனம் செய்திருந்தார். அதாவது கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், முதல்-மந்திரி பதவிக்காக திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று பிரகலாத் ஜோஷி தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் பிரகலாத் ஜோஷிக்கு முதல்-மந்திரி பதவி வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக, குமாரசாமி கூறி இருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்களும் பிரகலாத் ஜோஷிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் பிரதமர் மோடிக்கு கீழ் மத்திய மந்திரியாக இருக்கவே தான் விரும்புவதாக பிரகலாத் ஜோஷி கூறி இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டார்.
    • நிலக்கரி எடுப்பதற்கான ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் 3 பகுதிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது.

    சென்னை:

    நிலக்கரி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகள் இடம் பெற்றிருந்தன.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய 3 பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.

    டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டார்.

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் 3 பகுதிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. திருத்தப்பட்ட நிலக்கரி ஏல பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய 3 பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

    • காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
    • தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர்.

    உப்பள்ளி

    மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை. வானமும், பூமியும் ஒன்றாக மாறிவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையின்படி பார்த்தால், 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். தலித் மற்றும் விவசாயிகள் பெயரில் அக்கட்சி பொய்களை கூறி வருகிறது.

    இதற்கு முன்பு உத்தரகாண்டிலும் இதேபோன்ற பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. இதனால் அங்கு தோல்வியை தழுவியது. பா.ஜனதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். அதுபோல் கர்நாடகத்திலும் காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது இந்துக்களை அவமதிப்பது போன்றது. தற்போது பஜ்ரங்தளத்தையும், பி.எப்.ஐ. அமைப்பையும் தடைசெய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. இது சமதான அரசியலின் ஒரு பகுதியாகும். மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும் நாட்டுக்காக என்ன செய்ய போகிறார்கள்?.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூத்த தலைவர்கள் பலர் மன்னிப்பு கேட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
    • ராகுல்காந்தி பாராளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்தி வருகிறார்.

    புதுடெல்லி :

    மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பியூஸ் கோயல் கூறியதாவது:-

    ராகுல்காந்தி லண்டனில் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் அடிப்படையற்றவை. அதைக்கேட்டு, ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அவர் இழிவுபடுத்தி விட்டார். தனது செயலுக்கு சிறிதும் வருந்தாமல், ஏதோ பெரிய தேசபக்த காரியத்தை செய்ததுபோல் அவர் நடந்து கொள்கிறார். அவர் முதலில் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    இதற்கு முன்பு இந்தியாவின் நற்பெயர் மீது இந்த அளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை. அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் ஜனநாயகம் மோசமாக இருப்பதாக காட்டி, வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கோருவது போன்ற கடுமையான குற்றம் வேறு இல்லை.ஜனநாயகத்தின் தாய் என்று உலகமே ஒப்புக்கொண்ட இந்தியாவை ராகுல்காந்தி இழிவுபடுத்தி இருக்கிறார். அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடும், எம்.பி.க்களும் கேட்கிறார்கள். ஆனால், மன்னிப்பு கேட்காமல், காங்கிரஸ் குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.

    மூத்த தலைவர்கள் பலர் மன்னிப்பு கேட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், ராகுல்காந்தி பாராளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராகுல்காந்தி இழிவுபடுத்திய ஜனநாயகம்தான் அவரை வயநாடு தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்தது. சமீபத்தில், இமாசலபிரதேசத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது.

    ஆனால், 3 வடகிழக்கு மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன், ராகுல்காந்தி ஜனநாயகத்தை இழிவுபடுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் நேற்று பேசினார்.
    • அப்போது பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.

    மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை அவர் சாடினார்.

    அனைத்து விஷயங்களிலும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள். நமது நாட்டின் நற்பெயர் மற்றும் நமது சந்தைகளின் அமைப்பு ஸ்திரத்தன்மை ஆபத்தில் உள்ளன. இவை அனைத்தையும் முழுமையாக அனைத்து அம்சங்களிலும் விசாரிக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது அவர் பேசுகையில், சில பாஜகவினர் சில கருத்துக்களை கூறியுள்ளனர். மஹுவா மொய்த்ரா தனது உரைக்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். மேலும், அவர் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்ததால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறித்து மஹுவா மொய்த்ரா சில நாடாளுமன்றத்திற்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய தனது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

    • பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.
    • காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது.

    சிக்கமகளூரு:

    சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் சந்திரதிரிகோண மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி,முருகன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் மத்திய மந்திரி முருகன் பேசியபோது கூறியதாவது:-

    ஒரே பாரதம், ஒரே தாய். நாம் அனைவரும் ஒரே பாரத தாயின் குழந்தைகள் ஆவோம். அந்த வகையில் காசியில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் பிரதமர் மோடி யாகம் நடத்தினார். அப்போது மக்களிடையேயான ஒற்றுமை, உறவு குறித்து பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இனியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

    கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கநாதர் உள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் உள்ளார். இரண்டும் ஒரே கடவுள்தான். காவிரி நீரை அண்ணன் - தம்பி போல் பங்கிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஒற்றுமை உணர்வுடன் நாம் வாழ்வது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அவர் தனது உரை முழுவதையும் தமிழிலேயே பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    உலக அளவில் இந்தியா 5-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இங்கிலாந்தைவிட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.

    சூரியனும், சந்திரனும் உதயம் ஆவது எவ்வளவு உண்மையோ, அதேபோல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடக சட்டமன்ற தேர்தலை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம். மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார். காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது. ராகுல் காந்தி, சித்தராமையா போன்றோர் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய மந்திரிகள் பதிலடி

    சுதந்திர போராட்டத்தில் பாஜகவினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் பாஜகவினர் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டு கொள்ளாமல், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தாமல் அந்த கட்சி தப்பிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பாஜக அரசு சிங்கம் போல் பேசுகிறது, ஆனால் எலி போல் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கார்கேவின் இந்த பேச்சு, பாராளுமன்றத்தில் அமளியை ஏற்டுத்தியது. இந்நிலையில் கார்கேவின் கருத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, தற்போதைய காங்கிரஸ் அசல் அல்ல, இது போலி தலைவர்கள் நிறைந்த இத்தாலி காங்கிரஸ் என்று விமர்சித்தார். அசல் காங்கிரசில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், சர்தார் படேல் போன்ற தலைவர்கள் விவகாரத்தில் தற்போதைய காங்கிரஸ் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸைக் கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியம் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்றும், தற்போதைய போலி காங்கிரசின் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்றும் அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கே தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், அவரால் இவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியும் என்பதை யாரும் நம்ப முடியாது என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக ராகுல்காந்தியும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறிய மற்றொரு மத்திய மந்திரி அஸ்வனி குமார் சௌபே, இதுபோன்ற அற்பமான கருத்துக்கள் காங்கிரஸ் பாத யாத்திரையை சவ யாத்திரையாக மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது. விடுமுறைகள் தவிர்த்து, மொத்தம் 17 அமர்வுகள் நடக்கிறது.

    இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு இறுதி செய்து வருகிறது. அதே சமயத்தில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டி உள்ளது.

    இதை கருத்தில்கொண்டு மத்திய அரசு டிசம்பர் 6-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் அன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

    இதையொட்டி பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் சபை தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள், விவாதிக்கப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

    அதற்கு தங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு அவைகளும் சுமுகமாக நடைபெற தங்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×