search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Express Train"

    • பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது.
    • வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

    பெங்களூரு :

    ரெயில்வே துறை சார்பில் நேற்று பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தார்வார் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

    விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த ரெயிலில் கவர்னர் மற்றும் பிரகலாத்ஜோஷி ஆகியோர் பயணம் செய்தனர். இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-

    நாடு முழுவதும் ரெயில்வே துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் பணிகளில் ரெயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ரெயில்வே துறை நாட்டின் போக்குவரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்வதுடன் நாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்தியா, ரெயில்வே தொடர்பு வசதிகளில் உலகின் 4-வது பெரிய நாடாக விளங்குகிறது.

    நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது. மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரூ.47 ஆயிரத்து 346 கோடி மதிப்பீட்டிலான ரெயில்வே உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கர்நாடகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 561 கோடி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 55 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள வந்தேபாரத் ரெயில் தென் கர்நாடகம், வட கர்நாடகத்தை ஒருங்கிணைக்கிறது. வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது நமது நாட்டின் கவுரவத்தை உயர்த்துவதாக உள்ளது.

    இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசியதாவது:-

    பெங்களூரு-தார்வார் இடையே அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வட கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது வந்தேபாரத் ரெயில் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெலகாவி பாதையில் இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இதுவரை 23 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்களின் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் தார்வாரில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரெயில் புறப்படும் இடம் பெங்களூரு. அதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பிரகலாத்ஜோஷி பேசினார்.

    • வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது.
    • புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.

    மும்பை :

    கடந்த நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் 16 பெட்டிகளுடன் 1,128 பயணிகள் அமரும் வசதி கொண்டது. காந்திநகரில் இருந்து மும்பைக்கு 5½ மணி நேரத்தில் வந்து சேருகிறது.

    மும்பையில் இருந்து காந்திநகருக்கு ஏ.சி. சேர் கார் இருக்கையில் பயணிக்க ரூ.1,275 கட்டணமாகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்கு ரூ.1,440 ஆகவும் கட்டணம் நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல மும்பையில் இருந்து காந்திநகருக்கு எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 455 ஆகவும், மறுமார்க்கமாக ரூ.2 ஆயிரத்து 650 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

    2 மாதங்களில் இந்த வந்தே பாரத் ரெயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ரெயில் எண் 20901 மும்பை-காந்திநகர் வந்தே பாரத் ரெயில் டிக்கெட் மூலம் ரூ.4 கோடியே 49 லட்சமும், 20902 எண் கொண்ட காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.4 கோடியே 72 லட்சமும் கிடைத்து உள்ளது. மொத்த வருவாய் ரூ.9 கோடியே 21 லட்சம் ஆகும்.

    கடந்த அக்டோபர் மாதம் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.8 கோடியே 25 லட்சம் வருவாய் ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த ரெயிலின் சேவையால் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படும் மற்ற ரெயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை. புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் மற்ற ரெயில்களும் 100 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது" என்றார்.

    ×