search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hiranandani"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையில் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.


    இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அழிவுக்கான ஆரம்பம் இது என பா.ஜ.க.வை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சாடினார்.

    இதுதொடர்பாக, மஹுவா மொய்த்ரா கூறுகையில், நெறிமுறைக் குழுவுக்கு டிஸ்மிஸ் அதிகாரம் இல்லை. இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். என்னை வாயை மூடிக்கொண்டு அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என இந்த மோடி அரசு நினைத்திருந்தால் அது நடக்காது. இந்த கங்காரு நீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் காட்டியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். அதானி உங்களுக்கு முக்கியம். எந்த ஒரு பெண் எம்.பி.யை அடிபணிய வைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
    • அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என நெறிமுறைக்குழு குறிப்பிட்டது.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இதற்கிடையே, மக்களவையில் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
    • நெறிமுறைக்குழு 500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினருக்கு லாக்கின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தை பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவையின் நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபனைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது என நெறிமுறைக்குழு தெரிவித்தது. அத்துடன் எம்.பி. பதவியில் இருந்த நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் அவை தொடங்கியதும் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை மீது விவாதம் நடைபெற்று வாக்குகள் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வந்த மஹுவா மொய்த்ரா, "துர்கா தேவி வந்தாள்! தற்போது நாம் பார்ப்போம். அழிவு வரும்போது, முதலில் மனசாட்சிதான் அழிகிறது. அவர்கள் வஸ்த்ரஹாரனை (பாஞ்சாலியின் துயில் உரிதல்) தொடங்கிவிட்டார்கள். தற்போது நீங்கள் மகாபாரத போர்க்களத்தை பார்ப்பீர்கள்." எனத் தெரிவித்தார்.

    குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் எழுப்ப பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
    • மக்களவை உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டுகளை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும், பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டு ஆகியவற்றை தொழில் அதிபருக்கு பகிர்ந்ததாகவும், அவர் அதை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொர்டர்பாக பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மஹுமா மொய்த்ரா இந்த குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்காமல் மஹுமா மொய்த்ரா வெளியேறினார்.

    விசாரணைக்குப் பிறகு இன்று வினோத் குமார் தலைமையிலான நெறிமுறைக்குழு வரைவு அறிக்கை தயார் செய்கிறது. அப்போது மஹுமா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்களவை உறுப்பினர் உள்நுழைவுச் சான்றுகளை தொழில் அதிபருடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொய்த்ராவின் நடத்தை மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது மற்றும் குற்றமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசால் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    நெறிமுறைக்குழு அறிக்கை தாக்கல் செய்தபின், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் நடவடிக்கை மேற்கொள்வார். அரசு விசாரணை நடத்த உத்தரவிடுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

    • பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோரிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை
    • மஹுவா மொய்த்ராவை தவிர மற்ற நபர்களிடம் விசாரணை வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது நெறிமுறைக்குழு

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகிய இருவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் மத்திய தொழில்நுட்பத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது பாராளுமன்ற நெறிமுறைக்குழு. அதில் மஹுமா மொய்த்ராவின் பாராளுமன்ற மக்களவையின் லாக்கின் தொடர்பான விவரத்தை கேட்டுள்ளது.

    மேலும், துபாயில் இருந்து தயாரிக்கப்பட்ட தர்ஷன் ஹிராநந்தனியின் பிரமாண பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் அளிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    மஹுவா மொய்த்ராவைத் தவிர மற்ற யாரிடமும் விசாரைணை நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    ×