என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஷிகாந்த் துபே"

    • நாட்டில் நடக்கும் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு என்று கூறியிருந்தார்.
    • நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடிக்கு 56 இன்ச் அகல மார்பு என்று பாராட்டியிருந்தார்.

    மசோதாக்களை நிறைவேற்ற குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்ததற்காக உச்ச நீதிமன்றத்தை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே காட்டமாக விமர்சித்திருந்தார்.

    நாட்டில் நடக்கும் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு என்று கூறியிருந்தார். நாட்டில் மதப் போரைத் தூண்டுவதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு என்று நிஷிகாந்த் கூறினார்.

    இந்நிலையில் அவருக்கு எதிரான அவமதிப்பு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    விசாரணையின்போது பேசிய வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, "எங்கள் தோள்கள் போதுமான அளவு அகலமானவை" என்று தெரிவித்தார்.

    இருப்பினும் நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை நீதிபதி நிராகரித்தார். ஆனால் இதுதொடர்பாக விரைவில் ஒரு உத்தரவை பிறப்பிப்போம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பின் மத்திய அரசின் நடவடிக்கைகளை புகழ்ந்த நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடிக்கு 56 இன்ச் அகல மார்பு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்
    • நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.

    சுப்ரீம் கோர்ட் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என தன்கர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    நீதிமன்றத்திற்கும் இந்திய தலைமை நீதிபதிக்கும் (CJI) எதிரான கருத்துக்களுக்காக துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோரினார். இதை கேட்ட நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் மத்திய அரசின் உயர் சட்ட அதிகாரியான அட்டர்னி ஜெனரலின் (ஏஜி) ஒப்புதலைப் பெற வேண்டும்.

    "எனவே நீங்கள் மனுத்தாக்கல் செய்யுங்கள். தாக்கல் செய்வதற்கு, எங்கள் அனுமதி உங்களுக்குத் தேவையில்லை. உங்களுக்கு ஏஜியின் அனுமதி தேவைப்படும்" என்று நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். இதன்மூலம் துபே மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர்.
    • அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்?

    மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜகவை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார்.

    இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.

    அந்த இரண்டு எம்.பி-க்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

    மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட கவர்னருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இத்தீா்ப்பை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

    மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில் நீதித்துறை மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கா் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து இருந்தன.

    இதற்கிடையே பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே , தினேஷ் சர்மாவின் கருத்துக்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் பாஜக அவற்றுடன் உடன்பட வில்லை அல்லது அத்தகைய கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

    பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் சுப்ரீம்கோர்ட்டு உள்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜன நாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியலமைப்பு பாதுகாப்பின் வலுவான தூண் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இதுபோன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நான் அறிவுறுத்தி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
    • முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சாடினார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எமேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக சுப்ரீம் கோர்ட்டை சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
    • அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என நெறிமுறைக்குழு குறிப்பிட்டது.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இதற்கிடையே, மக்களவையில் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையில் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.


    இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அழிவுக்கான ஆரம்பம் இது என பா.ஜ.க.வை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சாடினார்.

    இதுதொடர்பாக, மஹுவா மொய்த்ரா கூறுகையில், நெறிமுறைக் குழுவுக்கு டிஸ்மிஸ் அதிகாரம் இல்லை. இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். என்னை வாயை மூடிக்கொண்டு அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என இந்த மோடி அரசு நினைத்திருந்தால் அது நடக்காது. இந்த கங்காரு நீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் காட்டியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். அதானி உங்களுக்கு முக்கியம். எந்த ஒரு பெண் எம்.பி.யை அடிபணிய வைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    ×