என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊடுருவல் விவகாரம்: அமித்ஷா குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மஹுவா மொய்த்ரா
    X

    ஊடுருவல் விவகாரம்: அமித்ஷா குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மஹுவா மொய்த்ரா

    • பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள்.
    • பி.எஸ்.எப். உள்ளிட்ட 5 படைகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.

    கொல்கத்தா:

    வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அப்படியிருக்க ஊடுருவலுக்கு மேற்குவங்க அரசை எப்படி பா.ஜ.க.வினர் குறை கூற முடியும்?

    பிரதமர் மோடி ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது உள்துறை மந்திரி சிரித்துக்கொண்டே கைதட்டுகிறார்.

    ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?

    அமித்ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்கவேண்டும். வேறு வழியில்லை. உள்துறை மந்திரியும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளைப் பாதுகாக்க தவறினால் அது யார் தவறு? எங்கள் தவறா? உங்கள் தவறா? பி.எஸ்.எப். என்னதான் செய்கிறது? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    மஹுவா மொய்த்ராவின் பேச்சு பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மஹுவாவை கைது செய்யும்படி பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹுவா மொய்த்ராவை மன்னிப்பு கேட்க மம்தா பானர்ஜி சொல்ல வேண்டும் அல்லது அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×