என் மலர்
நீங்கள் தேடியது "srinidhi"
- சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.
- இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 -வது சீசன் டைட்டில் மற்றும் ரூ.60 லட்சம் வீட்டை ஶ்ரீநிதா பரிசாக வென்றவர். இரண்டாவது இடத்தை ஹர்ஷினி வென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த அக்ஷராவிற்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் மற்ற மூன்று போட்டியாளர்களான ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் ஜன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, ஜூலை 23-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #NaliniChidambaram #KartiChidambaram






