search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவரை மனைவி-கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்
    X

    கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவரை மனைவி-கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்

    • கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
    • தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் அருகே உள்ள குளத்தின் கரைக்கு அருகே கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா(வயது 35) புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்துவிட்டார்.

    அங்கு கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்றுவந்துள்ளார்.

    அப்போது அவருக்கு ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனைப்பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி, மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல வினிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்தார்.

    Next Story
    ×