என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.100 கோடி மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்
- பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
- நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம், திருப்பூர்,ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வங்கியில் கடன் பெற்று சொந்தத் தொழில் செய்யலாம் என கூறியும், அவர்களிடமிருந்து சொத்து பத்திரங்களை பெற்று வங்கியில் அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று சுமார் 100 கோடி அளவில் மோசடி செய்ததாக, பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 51) ,அவரது அண்ணன் விஜயகுமார்(53) , மகன் ராகுல் பாலாஜி(27) மற்றும் பிரவீனா(41) உள்ளிட்டவர்கள் மீது பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி,உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்கு உள்ளது.
ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில்,கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் புகார் செய்தார்.
கடந்த 2018 ம் ஆண்டு சிவக்குமார், பிரவீனா, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய3 பேரும், சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என குமரேசனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி சொத்து பத்திரங்களை கொடுத்துள்ளார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளனர்.
ஆனால் டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யாமல், தாமதம் செய்துள்ளனர். இதனால் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி குமரேசன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச் சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்ட போது முறையாக பதிலளிக்கவில்லை, எனவே மோசடியில் ஈடுபட்ட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்,பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பிரவீனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவினா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிவக்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்ட சிவக்குமார் தலைமறைவானார். பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி அருகே அவர் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது அண்ணன் விஜயகுமார் , அவரது மகன் ராகுல் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்