search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sealed"

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது
    • உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

    இந்தவகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தா.பழூர் பகுதி மற்றும் சிலால் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    கலியமூர்த்தி, மகேஷ்குமார் என்பவர்களுக்கு சொந்தமான 2 கடைகள் தொடர் குற்றம் புரிந்தமைக்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதமாக என ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், துணை காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனையான மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பார்கள் பல இடங்களில் இணைந்து செயல்படுகிறது. டாஸ்மாக் பார்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் அனுமதிக்கப்பட்ட நேரம். ஆனால் இந்த நேரத்தை விட சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுக்கோட்டை நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் பார்களில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து போராட்டம் நடந்தது.

    போலீசாரும் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்தாலும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்' வைத்தனர்.இந்த சோதனை குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

    எந்தெந்த பார்கள் என்ற விவரத்தையும் டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்க மறுத்து விட்டனர். மாவட்ட மேலாளரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும் என கூறிவிட்டனர். அவரை தொடர்பு கொண்டால் பதிலும் அளிக்கவில்லை.இதற்கிடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளின் அருகில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் அகற்றினர்.

    • வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
    • இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    ஊட்டி,

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வாறு வருகை தரும் அவர்கள் ஊட்டி, குன்னூரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து தங்குகின்றனர்.

    பின்னர் பூங்காக்கள், காட்சி முனைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அறை கிடைக்காதவர்கள் காட்டேஜ்களில் தங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் குன்னூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்கு என அனுமதி பெற்று விட்டு விதிமீறி தங்கும் விடுதியாக மாற்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, குன்னூர் தாசில்தார் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீபக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் குன்னூர் நகரம், கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அனுமதியின்றி 2 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 விடுதிகளை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வீட்டிற்கு என அனுமதி பெற்று விட்டு அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றக்கூடாது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம் குறைகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஜெயங்கொண்டத்தில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது
    • புகாரின் அடிப்படையில் பெட்டி கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவிராயர் மகன் வீரமணி (வயது 38). இவர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 10 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் பெட்டி கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, நகராட்சி ஆணையர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ் மற்றும் அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் வீரமணி பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பாகவும், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மர்மநபர்கள் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.எனவே அந்த பஸ் நிறுத்தம் அருகே சில சமூக விரோதிகள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • 18-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் உப்பிலிபாளையத்தில் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும், குளுக்கோஸ் போடுவதாகவும், காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்–கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மெடிக்–கல்ஸ் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நாளை 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
    • விளம்பர பலகை மற்றும் ஒலிப்பான் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாதலமாக உள்ள காரணத்தினால் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகப்படியாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விளம்பர பலகையை வைத்து தொடர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    கியாஷ்க் சரியான முறையில் செயல்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணிப்பதோடு அருகில் உள்ள கடைகளில் குப்பைகளை கியாஷ்கில் கொடுக்குமாறு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனைச்

    சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான் கருவி மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை இயக்கமாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • 27 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் (பார்) நேற்று காலை சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்களும், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த மதுபான கூட ஊழியர் குன்னம் தாலுகா, ஒகளூர் கிழக்கு வ.உ.சி.நகரை சேர்ந்த சுப்ரமணியின் மகன் முருகேசனை (வயது 34) கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த மதுபான கூடம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

    • குட்கா,புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • தண்டனைக்குரிய குற்றமாகும்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் தேவேந்திரன் என்பவர் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து தேவேந்திரன் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதையறிந்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சின்னமுத்து, இளங்கோவன், ரவி ஆகியோர் தேவேந்திர டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையினுள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 750 கிராம் இருந்தது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்து டீக்கடைக்கு சீல் வைத்தனர்.

    பின்னர் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமா கூறுகையில், தேவேந்திரன் என்பவரது டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுந்த அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் எண்ணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இக்கடையில் வணிகம் செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும். இந்த அறிவிப்பாணையே அல்லது பூட்டின் மீதுள்ள அரக்கு சீலையோ அகற்றுவது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்தார்.

    • மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • கடைக்கான உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மதுரை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சமயநல்லூர் பஜாரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு டீக்கடை நடத்தி வரும் ஊர்மெச்சிகுளம் மீனாட்சிசுந்தரம், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த டீக்கடை மற்றும் பூக்கடைக்கு சீல் வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.85ஆயிரம் மதிப்பு உள்ள 44. 397 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    7 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் சம்பந்தப்பட்டவரின் கடைக்கான உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.

    சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவற்றை ஆற்றில் கலப்பதால்  சுத்தமான  தண்ணீர் மாசடைகிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், அலர்ஜி, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன.

    வழக்கமாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக எடுப்பதில்லை.  இதனால்    சென்னை மாசுகட்டுபாட்டுவாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்,  விதி மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதன் தொர்ச்சியாக நேற்று முன்தினம் பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில்   11 சாய ஆலைகளுக்கும்  மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 11 சாய ஆலைகளுக்கும்  சீல் வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ×