search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College of Engineering"

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் கிளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக அணுமின் உற்பத்தி நிலையத்தில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் இயக்குனர் விக்னேஸ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனிராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணுமின் நிலையம் கூடுதல் முதன்மை பொறியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அணு மின் நிலையங்களில் முக்கியத்துவம், அணு மின் நிலையங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், கேட் தேர்வின் முக்கியத்துவம் முதலான தகவல்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மின்னணு தொடர்பு மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார். இணை பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.

    • பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா நடந்தது.
    • இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும். பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கல்லூரி கலையரங் கத்தில் நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    இதில் பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் இயக் குநர் விக்னேஷ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தி குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். கல்லூ ரியின் டீன் மாரிச்சாமி அனைவரையும் வரவேற் றார்.

    கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் செல்வராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரகநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் பல வருடங்களாக இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதி யான பயிற்சி அளித்து வருகிறேன். இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்குவதால் 4 வருடங்கள் முடிவில் ஒழுக்கத்துடன் கூடிய பட்டபடிப்பை பெற்று உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைக்கு வருவார் கள் என உறுதியளித்தார்.

    பொறியியல் படிப்பை வரும் நான்கு வருடங்கள் நன்றாக படித்தால் உங்கள் தலைமுறை 40 வருடங் களுக்கு மேலோங்கி நிற் கலாம். எனவே மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது என்று அவர் பேசி னார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இருகல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் சக்தியஸ்ரீ நன்றி கூறினார்.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் குரு பிரியா (வயது 17). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்கொலை

    சம்பவத்தன்று குரு பிரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குரு பிரியா அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அங்கு தனியறைக்கு சென்று கதவை பூட்டி கொண்ட குரு பிரியா வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது சேலையில் குருபிரியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    விசாரணை

    தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
    • நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர் அவினாஷ் எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரிதாளாளர்ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிசாமி தொடக்க உரையாற்றினார். கணிப்பொறியியல் துறை தலைவர் ராமதிலகம் வாழ்த்துரை வழங்கினார்.

    கணிப்பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி கனகதுர்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி இன்க்ரீக்ஸ் டெக் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மொஹமத் நவ்சத்தும் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினர் அவினாஷ் பேசுகையில், நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சவால்களை சந்திப்பது குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் தொழில் அதிபர்களாகவும், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் மூலமாக சிறு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழில் அதிபராக வளர வேண்டும் என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசண்ேடசன், பிளைண்ட் கோடிங், கேப் பெஸ்ட் , மக்ல்ஸ் இன்டலக்ட் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த போட்டிகளும், கிரேசி சேஸ், தம் சரசட்ஸ், டல்கோனா கேன்டி, ஜியூக்பாக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இந்த போட்டிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான நிறைவு விழாவில், 4-ம் ஆண்டு மாணவி லிதியா ஸ்ரீ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்- ஒருங்கிணைப்பாளர்கள் அருண் சண்முகம், பாலகணேஷ், இறுதியாண்டு மாணவ ஒருங்கிணைப்பாளர்களான விக்னேஷ், மணிகண்டன், மதுபாலா, வைஷ்ணவி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
    • பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
    • மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

    இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.

    அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

    ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமினை கல்லூரி முதல்வர் விஜய் கிருஷ்ணா ரபாக்கா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

    முன்னதாக அந்நிறுவனத்தின் சென்னைமற்றும் பெங்களூரு மண்டல மனிதவள மேலாளர், மாணவர்க ளுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கினர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு தொழில்நுட்பத் தேர்வு மற்றும் மனிதவள தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தி 17 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணையை வழங்கினர். பணியில் சேர்ந்தவர்க ளுக்கு ஆண்டிற்கு ரூ. 3.5 லட்சம் சம்பளம் கிடைக்கும்.

    முகாமிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சேதுமாதவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு, கணக்கு மேலாளர் ராஜேஷ்குமார் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

    • கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.
    • மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் மேலாண்மைத்துறை மாணவர் சங்கம் சார்பில் 'மிடிலைட் 22' கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை லுகாஸ் டி.வி.எஸ். நிறுவன மூத்த அதிகாரி தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும். தொடர்ச்சியான கற்றல், புதுப்பித்து கொள்ளும் தன்மை, பணிக்கு தேவையான திறன்கள் மற்றும் நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டிய தன்மைகளை வளர்த்து கொள்ள வேண்டும்' என்றார். கருத்தரங்கில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் அகல்யா கருத்தரங்கு நிறைவு அறிக்கை வாசித்தார். முடிவில் பேராசிரியர் அருண் நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர் மன்சூர் இப்ராஹிம் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 2019-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் செந்தில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சண்முகம் கலந்துகொண்டு கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

    அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற ஒரு தங்கப்ப தக்கம் உட்பட 16 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 688 இளநிலை மாணவ-மாணவிகளுக்கும், 200 முதுநிலை மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல், தகவல் தொடர்பு துறை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    ×