கணிப்பொறியியல் துறை தொழில்நுட்ப கருத்தரங்கம்

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர் அவினாஷ் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.
Published on

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரிதாளாளர்ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிசாமி தொடக்க உரையாற்றினார். கணிப்பொறியியல் துறை தலைவர் ராமதிலகம் வாழ்த்துரை வழங்கினார்.

கணிப்பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி கனகதுர்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி இன்க்ரீக்ஸ் டெக் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மொஹமத் நவ்சத்தும் பங்கேற்றார்.

சிறப்பு விருந்தினர் அவினாஷ் பேசுகையில், நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சவால்களை சந்திப்பது குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் தொழில் அதிபர்களாகவும், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் மூலமாக சிறு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழில் அதிபராக வளர வேண்டும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேப்பர் பிரசண்ேடசன், பிளைண்ட் கோடிங், கேப் பெஸ்ட் , மக்ல்ஸ் இன்டலக்ட் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த போட்டிகளும், கிரேசி சேஸ், தம் சரசட்ஸ், டல்கோனா கேன்டி, ஜியூக்பாக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

இந்த போட்டிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான நிறைவு விழாவில், 4-ம் ஆண்டு மாணவி லிதியா ஸ்ரீ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்- ஒருங்கிணைப்பாளர்கள் அருண் சண்முகம், பாலகணேஷ், இறுதியாண்டு மாணவ ஒருங்கிணைப்பாளர்களான விக்னேஷ், மணிகண்டன், மதுபாலா, வைஷ்ணவி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com