search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kongu"

    • கோவை கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
    • நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.

    கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.

    இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

    இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் உணவு திருவிழாவில் திரண்டுள்ளனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர். 

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    ×