search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Year Ceremony"

    • பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா நடந்தது.
    • இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும். பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கல்லூரி கலையரங் கத்தில் நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    இதில் பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் இயக் குநர் விக்னேஷ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தி குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். கல்லூ ரியின் டீன் மாரிச்சாமி அனைவரையும் வரவேற் றார்.

    கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் செல்வராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரகநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் பல வருடங்களாக இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதி யான பயிற்சி அளித்து வருகிறேன். இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்குவதால் 4 வருடங்கள் முடிவில் ஒழுக்கத்துடன் கூடிய பட்டபடிப்பை பெற்று உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைக்கு வருவார் கள் என உறுதியளித்தார்.

    பொறியியல் படிப்பை வரும் நான்கு வருடங்கள் நன்றாக படித்தால் உங்கள் தலைமுறை 40 வருடங் களுக்கு மேலோங்கி நிற் கலாம். எனவே மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது என்று அவர் பேசி னார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இருகல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் சக்தியஸ்ரீ நன்றி கூறினார்.

    ×